.

Pages

Saturday, August 15, 2015

தஞ்சையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் ! [ படங்கள் இணைப்பு ]

தஞ்சாவூரில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து. தியாகிகளை கௌரவித்து, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்.  சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கௌரவித்து  417 பயனாளிகளுக்கு ரூ.38 இலட்சத்து 25 ஆயிரத்து 559 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக 12 காவல் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 11 ஆயிரத்து 580 மதிப்பிலான மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களும், முதலமைச்சரின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் உதவித்தொகைகளும், 19 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்பில் இறப்பு உதவித் தொகைகளும்,  நலிந்தோர் நலத்திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பில் உதவி தொகைகளும், நலிந்தோர் நலத்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகைகளும், 17 பயனாளிகளுக்கு இந்திரா தேசிய விதவை உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 8 பயனாளிகளுக்கு இந்திரா தேசிய முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,  2 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 6 பயனாளிகளுக்கு பொது நிவாரண நிதி கீழ் ரூ.2 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான உதவித் தொகைகளும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண்கள் பெற்ற முன்னாள் படைவீரர்களின் 3 சிறார்களுக்கு ரூ.8 ஆயிரம் பரிசுத் தொகையினையும், மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளும், தொழிலாளர் நல வாரியம் சார்பில் 54 பயனாளிகளுக்கு ஓய்வூதிய தொகை மற்றும் இயற்கை மரணம் உதவித் தொகை ரூ.1 இலட்சத்து 38 ஆயிரம் உதவித் தொகைகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.3 இலட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.13 ஆயிரத்து 800 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும்,  22 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 100 மதிப்பிலான விலையில்லா சவைப்பெட்டிகளும், வேளாண்மைத்துறை சார்பில் 3 பயனானிகளுக்கு ரூ.8 ஆயிரத்து 250 மதிப்பில் பேட்டரியில் இயங்கும் தெளிப்பானும், 4 பயனாளிகளுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் அதிக மகசு10ல் பெற்றவருக்கு ஊக்க தொகையும், தோட்டக்கலைத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு பழச்செடிகளும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளை சிறப்பாக வளர்த்தமைக்கான பரிசும், 3 பயனாளிகளுக்கு கறவைப் பசு சிறப்பாக வளர்த்தமைக்கான பரிசும்,
கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பாக 12 பயனாளிகளுக்கு ரூ.48 ஆயிரம் மதிப்பில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழை கால நிவாரணத் தொகையும், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில்  33 பயனாளிகளுக்கு ரூ.4 இலட்சம் தனிநபர் கடனுதவியும், 10 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஆதார நிதியுதவியும், 30 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் இளைஞர் திறன் பயிற்சிக்கான  உதவித்தொகையும், கல்வித்துறை சார்பில் 4 நபர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ்களும், கால் நடை பராமரிப்புத்துறை சார்பில் 08 நபர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ்களும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில் 34 நபர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ்களும், சுகாதாரப்பணிகள் சார்பில் 20 நபர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ்களும், மருத்துவம் (தொழுநோய்)த்துறை சார்பில் 1 நபருக்கு பணி பாராட்டு சான்றிதழ்களும், வேளாண்மைத்துறை சார்பில் 13 நபர்களுக்கு நபர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ்களும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் 3 நபர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ்களும், அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை சார்பில் 2 நபர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ்களும், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் 1 நபருக்கு பணி பாராட்டு சான்றிதழ்களும், வருவாய்த்துறை சார்பில 29 நபர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ்களும், வருவாய்த்துறை சார்பில் 23 நபர்களுக்கு ரூ.8 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான வீட்டு மனைப்பட்டாவும், தோட்டக்கலைத் துறை சார்பில் நுண்ணீர் பாசன அமைப்பு செய்ய மானிய தொகையாக 4 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சத்து 51 ஆயிரத்து 329ம் ஆக மொத்தம் 417 பயனாளிகளுக்கு ரூ.38 இலட்சத்து 25 ஆயிரத்து 559 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன்  அவர்கள் வழங்கினார்.

இவ்விழாவில் மேலஉளுர் அரசு மேனிலைப்பள்ளி, ஈச்சங்கோட்டை அரசு மேனிலைப்பள்ளி, மாரியம்மன்கோவில் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, மாரியம்மன்கோவில் சி.எஸ்.மெட்ரிக் மேனிலைப்பள்ளி, தஞ்சாவ10ர் ஆக்ஸிலீயம் மேனிலைப்பள்ளி, இந்திய குழந்தைகள் நலச் சங்கம், பசுபதிகோவில் தூய கேபிரியல் மகளிர் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 450 மேற்பட்ட மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு மாநகர மேயர் திருமதி.சாவித்திரிகோபால், காவல் துணைத் தலைவர் திரு.சஞ்சய்குமார், காவல் துறை கண்காணிப்பாளர் திரு.கு.தர்மராஜன்,  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், பயிற்சி உதவி ஆட்சியர் திரு.தீபக் ஜேக்கப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.கு.சீனிவாசன், முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. ரெ. திருவளர்செல்வி,  மாவட்டக் ஊராட்சித்  தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சிங்காரவேலு, மாநகராட்சி ஆணையர் திரு.குமார், வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரின் துணைவியர் திருமதி.ஆனந்தசித்ராசுப்பையன், வட்டாட்சியர் திரு.சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் ஏற்பட்டு, வறுமை ஒழிந்திட இந்த சுதந்திர தினம் வழி வகுக்கட்டும். சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.