அதிரை நிருபர் இணையதளத்தில் சமூக விழிப்புணர்வு ஆக்கங்களை தொடர்ந்து வழங்கி வரும் பிரபல எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி. முத்துப்பேட்டை அல் மஹா மகளிர் அரபிக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார். அதிரை நிருபர் பதிப்பகம் சார்பில் இவரது முதல் வெளியீடாக 'மனுநீதி மனித குலத்திற்கு நீதியா ?' என்ற நூல் வெளியிடப்பட்டது. இவரது அடுத்த வெளியீடாக 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு' என்ற நூல் பிரபல 'சாஜிதா புக் சென்டர்' பதிப்பகம் சார்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிகள் சென்னை நந்தனத்தில் தற்போது நடந்து வரும் புத்தக கண்காட்சியில் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் இந்த நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் [ 04-02-2016 ] அன்று மாலை 4.30 மணியளவில் புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் முத்துப்பேட்டை அல் மஹா மகளிர் அரபிக் கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஹைதர் அலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நூலை வெளியிட உள்ளார். மேலும் சம்சுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், இணையதள ஊடக ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
நூலின் பிரதிகள் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ள கல்வியாளர்கள்- சமூக ஆர்வலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை புத்தக கண்காட்சி விற்பனையில் 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு'
வாழ்த்துகள்; அல்ஹம்துலில்லாஹ்;பொருளாதாரமும் வரலாறும் ஒருங்கே ஆய்வுகள் செய்யும் ஆற்றலைப் பெற்ற இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடக்க என் அவாவும்; துஆவும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteBest wishes to Ebrahim Ansari kakka congratulations.......Go ahead much and more....
ReplyDelete