.

Pages

Saturday, February 6, 2016

பிப். 22-ல் தஞ்சை உள்பட 3 மாவட்டங்களுக்கு விடுமுறை !

மகாகம் திருவிழாவையொட்டி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வரும் 22-ஆம் தேதி பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுத் துறை முதன்மைச் செயலாளர் யத்தேந்திர நாத் ஸ்வைன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:
கும்பகோணத்தில் வரும் 22-ஆம் தேதி மகாமகம் திருவிழா நடத்தப்படுகிறது. அந்த தினத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்படுகிறது. இந்த தினத்தின் போது, அனைத்து வங்கிகள், தனியார் தொழில் அமைப்புகள், அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும். மகாமகம் திருவிழா என்பதால் சிறப்பு நிகழ்வாகக் கருதி கடந்த 1881-ஆம் ஆண்டு செலவாணி முறிச் சட்டத்தின் கீழ், இந்த பொது விடுமுறை விடப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவாணி முறிச் சட்டத்தின் கீழ் விடுமுறை விடப்படுவதால், இந்த விடுமுறை ஊதியத்துடன்கூடிய பொது விடுமுறையாகும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.