.

Pages

Saturday, February 27, 2016

அதிரை பேருந்து நிலைய கடைகள் ஏலம்: பேரூராட்சி விதிக்கும் நிபந்தனைகள் !

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில், பேரூராட்சி சார்பில் கட்டப்பட்ட 24 வர்த்தக கடைகள் பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொதுஏலம் எதிர்வரும் 03-03-2016 வியாழக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை அதிரை பகுதிகளில் ஆட்டோ ஒலிப்பெருக்கி அறிவிப்பு செய்யப்பட்டன.

கடைகளை ஏலத்தில் எடுக்க உள்ளவர்களுக்கு அதிரை பேரூராட்சி நிர்வாகம் கீழ்கண்ட நிபந்தனைகளை அறிவித்து உள்ளது.

1. ஏலதாரர்கள் முன்வைப்பு தொகையாக ரூ 1 லட்சத்திற்கான டிடியை 'செயல் அலுவலர், பேரூர் மன்றம், அதிராம்பட்டினம்' என்ற பெயரில் அளிக்க வேண்டும்.

2. அதிரை பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் 2015-16 ஆம் ஆண்டிற்கு முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும்.

3. ஒருவருக்கு ஒரு கடை, உறவினர்களுக்கு அனுமதியில்லை

4. கடையை உள் வாடகைக்கு விட அனுமதியில்லை

5. பேருந்து நிலையத்தில் கவரிங் கடை, பெட்டிக்கடை, முடி திருத்தும் கடை, பழக்கடை, செருப்பு கடை, டீ கடை, டிபன் கடை, ஜவுளி கடை உள்ளிட்டவை மாத்திரமே நடத்த வேண்டும். வேறு கடைகள் நடத்தக்கூடாது.

உள்ளிட்ட மொத்தம் 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. வெளியூர் நபர் ஏலத்தில் கலந்து கொள்ள முடியுமா?

    ReplyDelete
  2. வெளியூர் நபர் ஏலத்தில் கலந்து கொள்ள முடியுமா?

    ReplyDelete
  3. 1. ஏலதாரர்கள் முன்வைப்பு தொகையாக ரூ 1 லட்சத்திற்கான டிடியை 'செயல் அலுவலர், பேரூர் மன்றம், அதிராம்பட்டினம்' என்ற பெயரில் அளிக்க வேண்டும்.

    2. அதிரை பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் 2015-16 ஆம் ஆண்டிற்கு முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும்.

    3. ஒருவருக்கு ஒரு கடை, உறவினர்களுக்கு அனுமதியில்லை

    4. கடையை உள் வாடகைக்கு விட அனுமதியில்லை

    5. பேருந்து நிலையத்தில் கவரிங் கடை, பெட்டிக்கடை, முடி திருத்தும் கடை, பழக்கடை, செருப்பு கடை, டீ கடை, டிபன் கடை, ஜவுளி கடை உள்ளிட்டவை மாத்திரமே நடத்த வேண்டும். வேறு கடைகள் நடத்தக்கூடாது.

    உள்ளிட்ட மொத்தம் 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

    மீதம் உள்ள 5 நிபந்தனைகள்????

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.