.

Pages

Monday, February 8, 2016

பல மாதங்களாக தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றிய 'கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' அமைப்பினர் !

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் ( CRESCENT BLOOD DONORS ) சார்பாக நேற்று (07-02-2016) காலை 7 முதல் சென்னை அடுத்து உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் பல மாதங்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி சிபிடி மாநில தலைவர் குர்ஷீத் ஹுசைன் தலைமையில் நடைபெற்றது . இந்த பணியில் சிபிடி-யுடன் இணைந்து ஊரப்பாக்கம் அரசு பள்ளி என்.சி.சி மாணவர்களும் ஈடுப்பட்டனர்.

இது குறித்து சிபிடி மாநில தலைவர் குர்ஷீத் ஹுசைன் அவர்கள் நம்மிடம் கூறுகையில்:
ஊரப்பாக்கம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இந்த பகுதியில் பல  மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமலும்,கொசுகள் தொல்லைகளும் அதிகமாக இருந்து வந்தது.இதனையடுத்து நாங்கள் "இது நம்ம ஊரப்பாக்கம் " என்ற பெயரில் நேற்றைய தினம் தூய்மை பணியில் கிட்டத்தட்ட 60-க்கும் மேற்ப்பட்டோர் ஈடுப்பட்டோம். அனைத்து குப்பைகளை சேகரித்து அனைத்தையும் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் டிராக்டர் முலம் கொட்டி விட்டோம்.

மேலும், குப்பைகள் அகற்றும் பணியோடு சேர்த்து பிளீச்சிங் பவுடர் போடும் பணி, கொசு மருந்து அடிக்கும் பணி,கருவமரத்தை அழிக்கும் பணியில் நாங்கள் ஈடுப்பட்டோம். இதோடு  நிறுத்தி விடாமல் 150 ஏழைகளுக்கு நேற்று இரவு உணவுகள் தயார் செய்து விநியோகம் செய்தோம் என்றார்.

மேலும் நாங்கள் வாரம் ஒரு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் ஆனால் நாங்கள் மாணவர்களாக இருப்பதால் எங்களிடம் பொருளாதார வசதிகள் குறைவாக உள்ளது .யாரேனும் எங்களுக்கு SPONSORS செய்ய விரும்பினால் நேரடியாக என்னை தொடர்பு கொள்ளலாம். எனது தொடர்பு எண் 904306844. மேலும் எங்கள் சேவைகளை CRESCENT BLOOD DONORS என்ற முகநூல் பக்கத்தில் பார்க்கலாம் என்றார்.

இந்த பணியில் சிபிடி உறுப்பினர்கள், சிபிடி தஞ்சை மாவட்ட செயலாளர் காலித் அஹ்மத், என்சிசி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் இரத்த தான கொடையாளர்களாக சேர விரும்புவோர் அல்லது இரத்தம் தேவைப்படுவோர் தொடர்புக்கு:
பேரா.செய்யது அஹ்மத் கபீர்: 9894365728
காலித் அஹ்மத்: 7200968093
சாலிஹ்: 9500293649
கலீபா: 9500392301

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.