.

Pages

Wednesday, February 17, 2016

அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தினம் உற்சாக கொண்டாட்டம் !

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான இன்று பிப்ரவரி 17 ல் நாடு முழுதும் கொடியேற்றும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம், பேரணி, நலத்திட்ட உதவி வழங்குதல், மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நடத்தி வருகின்றது.

இதையொட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் அதிரையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு PFI டிவிசன் தலைவர் வழக்கறிஞர் நிஜாம் தலைமை வகித்தார். ஏனைய PFI நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அதிரையில் தக்வா பள்ளி, செக்கடி மேடு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, வண்டிப்பேட்டை, ஷிஃபா மருத்துவமனை அருகில், பிலால் நகர் ரயில்வே கேட், ஈசிஆர் சாலை கல்லூரி முக்கம், ஈசிஆர் சாலை பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட மொத்தம் 10 இடங்களில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

முன்னதாக பாப்புலர் ஃப்ரண்ட் தின உரையை 'கேம்பஸ் டுடே' பத்திரிகை ஆசிரியர் குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி ஆற்றினார். இதனை தொடர்ந்து 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஓர் பார்வை' புத்தகம் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை அதிரை நகர PFI பொறுப்பாளர் ரிழா வெளியிட அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் பெற்றுக்கொண்டார். பின்னர் அதிரை காவல்துறை, பத்திரிகை நிருபர்கள், சமூக ஆர்வலர்கள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. மேலும் அதிரை அரசு மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ, எஸ்டிடியூ உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
 



1 comment:

  1. இவர் எந்த கச்சி எப்படி இந்த கச்சியில் சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.