இதையொட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் அதிரையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு PFI டிவிசன் தலைவர் வழக்கறிஞர் நிஜாம் தலைமை வகித்தார். ஏனைய PFI நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அதிரையில் தக்வா பள்ளி, செக்கடி மேடு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, வண்டிப்பேட்டை, ஷிஃபா மருத்துவமனை அருகில், பிலால் நகர் ரயில்வே கேட், ஈசிஆர் சாலை கல்லூரி முக்கம், ஈசிஆர் சாலை பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட மொத்தம் 10 இடங்களில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
முன்னதாக பாப்புலர் ஃப்ரண்ட் தின உரையை 'கேம்பஸ் டுடே' பத்திரிகை ஆசிரியர் குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி ஆற்றினார். இதனை தொடர்ந்து 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஓர் பார்வை' புத்தகம் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை அதிரை நகர PFI பொறுப்பாளர் ரிழா வெளியிட அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் பெற்றுக்கொண்டார். பின்னர் அதிரை காவல்துறை, பத்திரிகை நிருபர்கள், சமூக ஆர்வலர்கள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. மேலும் அதிரை அரசு மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ, எஸ்டிடியூ உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
இவர் எந்த கச்சி எப்படி இந்த கச்சியில் சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை
ReplyDelete