முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகமதுமாலிக் கடந்த 2014–ம் ஆண்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பட்டரைக்குளத்தில் நடந்த முறைகேடான பணிகளை எதிர்த்தும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து உயர்நீதி மன்றம் பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைகேடாக நடந்த பணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி சென்ற ஆண்டு பட்டரைக்குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் மற்றும் பள்ளி வாசல்கள் உட்பட ஏராளமான குடியிருப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது.
இந்நிலையில் அதே வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற வழிகாட்டுதலின்படி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும் என்று சமூக ஆர்வலர் முகமதுமாலிக், தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தார். இதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து சமூக ஆர்வலர் முகமதுமாலிக் சென்னை உயர்நீதி மன்றத்தில் சென்ற வாரம் சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 1–ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விசாரணையை நேற்று 3–ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். இச்செய்தியை அறிந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் அவசர அவசரமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி மேற்கொண்டு முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு 24 மணிநேரத்துக்குள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட நோட்டீசை அனைத்து ஆக்கிரமிப்பு வீடுகளிலும் அதிகாரிகள் ஒட்டினர்.
இந்த நிலையில் நேற்று முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருத்துறைப்பூண்டி வருவாய்த்துறை சர்வேயர்கள் குழுவினர் பேரூராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து இதற்கு அடையாளமாக சிவப்பு கொடிகளை நட்டனர்.
இந்நிலையில் இன்று காலை நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய் துறை முக்கிய அதிகாரிகள் மேற்பார்வையில் பேரூராட்சி சார்பில் அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணி தொடங்கியது.
சம்பவ இடத்தில் ஆர்.டி.ஓ செல்வசுரபி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் பழனிவேல், பேரூராட்சி செயல் அலுவலர் குலோத்துங்கன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் உள்ளனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், ஏ.டி.எஸ்.பி. முத்தரசன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் சமூக ஆர்வலர் முகமதுமாலிக்கிற்கு பல்வேறு தரப்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேபோன்று அவரது வீட்டுக்கும், அலுவலகத்திற்கும் பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் மொய்தீன் பிச்சை,முத்துப்பேட்டை
இதனையடுத்து உயர்நீதி மன்றம் பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைகேடாக நடந்த பணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி சென்ற ஆண்டு பட்டரைக்குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் மற்றும் பள்ளி வாசல்கள் உட்பட ஏராளமான குடியிருப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது.
இந்நிலையில் அதே வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற வழிகாட்டுதலின்படி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும் என்று சமூக ஆர்வலர் முகமதுமாலிக், தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தார். இதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து சமூக ஆர்வலர் முகமதுமாலிக் சென்னை உயர்நீதி மன்றத்தில் சென்ற வாரம் சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 1–ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விசாரணையை நேற்று 3–ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். இச்செய்தியை அறிந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் அவசர அவசரமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி மேற்கொண்டு முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு 24 மணிநேரத்துக்குள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட நோட்டீசை அனைத்து ஆக்கிரமிப்பு வீடுகளிலும் அதிகாரிகள் ஒட்டினர்.
இந்த நிலையில் நேற்று முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருத்துறைப்பூண்டி வருவாய்த்துறை சர்வேயர்கள் குழுவினர் பேரூராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து இதற்கு அடையாளமாக சிவப்பு கொடிகளை நட்டனர்.
இந்நிலையில் இன்று காலை நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய் துறை முக்கிய அதிகாரிகள் மேற்பார்வையில் பேரூராட்சி சார்பில் அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணி தொடங்கியது.
சம்பவ இடத்தில் ஆர்.டி.ஓ செல்வசுரபி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் பழனிவேல், பேரூராட்சி செயல் அலுவலர் குலோத்துங்கன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் உள்ளனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், ஏ.டி.எஸ்.பி. முத்தரசன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் சமூக ஆர்வலர் முகமதுமாலிக்கிற்கு பல்வேறு தரப்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேபோன்று அவரது வீட்டுக்கும், அலுவலகத்திற்கும் பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் மொய்தீன் பிச்சை,முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.