ஞாயிறு காலை 10:00 மணிக்கு தொலைக்காட்சி புகழ் செஃப் தாமோதரன் இந்த ரிச் வே ரெஸ்டாரெண்டை திறந்து வைத்தார். கிராத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை பேரா. முஹம்மது அப்துல் காதர் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கி சிறப்புரையும் ஆற்றினார்.
இந்த ரெஸ்டாரெண்டில் உலகத்தரத்துடன் கூடிய அனைத்து வகையான சைவ, அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
குளிர் சாதன வசதியுடன் 200 பேர் இருக்கைகள் கொண்ட அரங்கம், திறந்த வெளி டைனிங் ஹால் மற்றும் குளிர் சாதன டைனிங் ஹால் என இந்த ரெஸ்டாரெண்ட் களைகட்டுகிறது.
பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ரெஸ்டரெண்ட் இதுவே எனக் கூறப்படுகிறது.
இந்த ரெஸ்டாரெண்டின் உரிமையாளர் பிரபல அல் நூர் ஹஜ் சர்வீஸ் உரிமையாளர் முஹம்மது அலி என்பது குறிப்பிடத்தக்கது.
MAA SHAA ALLAH
ReplyDelete