.

Pages

Monday, September 26, 2016

துபாயில் 100 மில்லியன் திர்ஹம் செலவில் குகை, கண்ணாடி மாளிகையுடன் குர்ஆன் பூங்கா (படங்கள்)

அதிரை நியூஸ்:
துபாய், செப்-26
துபாயின் துணை ஆட்சியாளரும், நிதி அமைச்சரும், துபாய் நகராட்சியின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூமின் ஒப்புதலை தொடர்ந்து துபாயின் அல் கவானீஜ் பிரதேசத்தில் 60 ஹெக்டேர் பரப்பளவில் 100 மில்லியன் திர்ஹம் செலவில் குர்ஆன் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

கண்ணாடி மாளிகையினுள் சுமார் 12 பூங்கா தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன. அவை அனைத்தும் அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ள மரம், செடி, கொடிகளை கொண்டே அமைக்கப்படுவதுடன் அதனுடைய மருத்துவ, விஞ்ஞான தகவல்களையும் இடம்பெறச் செய்வதுடன் அத்தகைய மரம், செடி, கொடிகளையும், அதிலிருந்த தயாரிக்கப்படும் மருத்துவ பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. அத்துடன் நவீன உலகிற்கு அவற்றின் தேவையை பற்றியும் எடுத்துச் சொல்லப்படும்.

அல் குர்ஆன் மற்றும் நபி மொழியில் காணப்படும் மரம், செடி, கொடிகள் குறித்த அறிவியல் தகவல்களை சேகரித்து அதன் மூலம் இஸ்லாமிய கலாச்சாரங்கள் எவ்வாறு வெவ்வேறு கலாச்சாரங்கள் கலாசாரத் தொடர்புகளை இணைக்கும் உறவுப்பாலமாக பயன்படுகிறது என்பது குறித்தும் விளக்கப்படும்.

மேலும் இங்கே அமைக்கப்படும் செயற்கை அற்புதக் குகையினுள், அல் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் கூறும் பல்வேறு அற்புதங்களை இன்றைய தொழிற்நுட்ப உதவி கொண்டு காட்சி வடிவில் நம் கண் முன்னே நடப்பது போன்றே காட்சிப்படுத்தப்படும். இதன் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்ப்பதுடன் அவர்களுக்கு தேவையான குர்ஆனிய விளக்கங்களும் அங்கு வழங்கப்படும்.

பூங்காவை சுற்றி அமைக்கப்படும் மின்தகடு பொருத்தப்பட்டுள்ள செயற்கை மரங்களில் அழகிய காலிகிராப் வேலைபாடுகள் (Calligraph) செய்யப்படுவதுடன் மின்னுற்பத்தி, மொபைல் போன் சார்ஜர், வைபை வசதியுடன் அதன் கீழ் இளைப்பாரும் இருக்கைகள் என ஜமாய்த்திடவும் திட்டமிடப்பட்டுள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.