.

Pages

Thursday, September 29, 2016

அபூதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட எதிஹாத் விமானம் !

அதிரை நியூஸ்: அபூதாபி, செப்-29
நேற்று புதன் பகல் 12.06 மணியளவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு 329 பயணிகளுடன் புறப்பட்ட EY450 என்ற எண்ணுடைய போயிங் - 777 வடிவ விமானம் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறால் புறப்பட்ட 32 வது நிமிடத்தில் மீண்டும் அபுதாபி விமான நிலையத்தில் பத்திரமாக இறக்கப்பட்டது.

விமானிகள் மற்றும் விமான சிப்பந்திகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் அவசரகால நிலையை கையாளுதல் குறித்த சிறப்பு தொடர் பயிற்சிகளால் விமானமும் பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர் என எதிஹாத் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு மாற்று விமானம் மூலம் சிட்னி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தால் பகல் 12.50 வரை விமான நிலையம் மூடப்பட்டதுடன் அந்த நேரத்தில் தரையிறங்கவிருந்த ஒரு விமானம் ஷார்ஜாவிற்கும் மற்றொரு விமானம் அபுதாபியின் அல் பத்தீன் விமான நிலையத்திற்கும் திருப்பிவிடப்பட்டன.

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.