.

Pages

Saturday, September 24, 2016

அதிரையில் PFI நடத்திய மாபெரும் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் அ.மார்க்ஸ் பங்கேற்பு ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், செப்-24
பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் 'வெறுப்பு அரசியலை நிறுத்து' என்கிற முழக்கத்துடன் குமரி முதல் டெல்லி வரை தேசிய அளவிலான பிரச்சாரம் செப்டம்பா் 1 முதல் 30 வரை நடக்கிறது.

இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தனியார் திருமண மகாலில் கருத்தரங்கம் நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் நிஜாம் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். இவ்வமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் எச். முஹம்மது அலி ஜின்னா, எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவர் இசட். முகம்மது இலியாஸ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலர் ஜே. ஹாஜி சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக இவ்வமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ முகமது யூசுப், என்சிஎச்ஆர்ஓ தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஏ அபூபக்கர் சித்திக் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

தொடக்கத்தில் சி.எஃப்.ஐ மாநில குழு உறுப்பினர் வழக்கறிஞர் இசட். முஹம்மது தம்பி வரவேற்று நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். முடிவில் இவ்வமைப்பின் பட்டுக்கோட்டை டிவிசன் செயலர் என்.சேக் பரீது நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட இவ்வமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.