தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17,19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மனித நேய மக்கள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றன.
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டன. இதில் 10,13,17, 19 ஆகிய 4 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது அறிவித்துள்ளார்.
மமக வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
தெஷிமா ( வயது 38 ) க/பெ. தமீம் அன்சாரி, வார்டு எண்: 10
செளதா ( வயது 36 ) க/பெ. அஹமது ஹாஜா, வார்டு எண்: 13
ரபீக்கா, ( வயது 37 ) க/பெ. முஹம்மது சலீம், வார்டு எண்: 17
சமீமா நஸ்ரின், ( வயது 33 ) க/பெ. சாகுல்ஹமீது, வார்டு எண்: 19
இவர்கள் அனைவரும் நாளை ( 30-09-2016 ) பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதிராம்பட்டிணம் பேரூராட்சி தமிழகத்தின் தலைசிறந்த பேரூராட்சியாக மாற்றம் காணவேண்டும். சுதந்திரம் அடைந்த பின் தமிழகத்தின் முன்னேறிய ஊர்களில் அதிரையும் ஓன்று. இந்த ஊர் மக்களின் உழைப்பினால் வளர்ச்சியடைந்தது,நாகரீகம் மேம்பட்ட சமுதாயம் உருவானது. பெண்களின் வாழ்க்கை மேம்பட தனக்கென ஓரு தனி வழியை அமைத்துக்கொண்டது. தற்போது அதன் வளர்ச்சியில் சிறிய தொய்வு ஏற்பட்டுள்ளது,நவீன காலத்தின் வசதிகள் ஏற்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இனி வரும் உறுப்பினர்கள் இக்குறையை போக்க வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.
ReplyDelete