.

Pages

Monday, September 19, 2016

அதிரையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுகவினர் நடத்திய ஆலோசனைக்கூட்டம் !

அதிராம்பட்டினம், செப்-19
எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிரை பேரூர் திமுக நிர்வாகிகள் - உறுப்பினர்களின் கலந்தாலோசனைக்கூட்டம் திமுக அலுவகலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் ஜே. சாகுல் ஹமீது தலைமை வகித்தார். திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம், பட்டுக்கோட்டை மேற்கு பகுதி ஒன்றிய செயலாளர் ஏனாதி பா. இராமநாதன், அதிரை பேரூர் பொருளாளர் கோடி முதலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று 19 ந்தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என திமுக மாநில பொதுச்செயலாளர் கா. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதையொட்டி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் - உறுப்பினர்கள் கலந்தாலோசனை நடத்தினர். கூட்டத்தில் திமுக மாநில துணைச்செயலாளர் சற்குண பாண்டியன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொடக்கத்தில் அதிரை பேரூர் செயலளார் இராம குணசேகரன் வரவேற்றார். கூட்ட முடிவில் துணைச்செயலாளர் அன்சர்கான் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள், கவுன்சிலர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.