அதிரை நியூஸ்: துபாய், செப்-29
அமீரகத்தில் மீண்டும் போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் புதிய இரைகளை நோக்கி தங்கள் வலையை வீசுவதை கல்ஃப் நியூஸின் News Xpress புலனாய்வு குழு வெளிப்படுத்தியுள்ளது, இவர்கள் ஏற்கனவே 2011 ஆம் ஆண்டும் இதுபோன்ற ஸ்டிங் ஆபரேசன் நடத்தி இத்தகைய மோசடிகளை வெளிப்படுத்தியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பழைய உத்தியை மீண்டும் கையிலெடுத்துள்ள போலி நிறுவனங்கள் முதலில் 320 திர்ஹத்தை செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறும் ஒரு வாரத்தில் வேலையை கண்டிப்பாக பெற்றுத் தருவதாகவும் அடித்து விடுகின்றனர்.
இந்த போலிகளின் வாக்குறுதியை நம்பி நேர்முகத் தேர்வுக்குச் சென்றால், அந்த நேர்முகத் தேர்வு ஊடகங்களில் நிறுவனங்களால் ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டு நேரடியாக நடத்தப்பெறும் ஒன்றாக இருக்கும். இந்த நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பு போலி ஏஜென்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.
சிலவேளை அவர்களே பிற நிறுவனங்களில் பணியாற்றும் தெரிந்தவர்கள் மூலம் ஏற்படுத்தும் போலி நேர்முகத் தேர்வுகளையும் ஒப்புக்காக நடத்தி 320 திர்ஹம் முன்பதிவு கட்டணம் செலுத்திய ஏமாளிகளை நிராகரிக்கின்ற நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.
மேலும், நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்காவிட்டால் பதிவுக் கட்டணமாக செலுத்திய 320 திர்ஹம் திரும்பத் தரப்படும் என வேறு அவிழ்த்து விடுகின்றனர். இந்த தந்திரங்கள் அனைத்தும் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு அரசால் நசுக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தொழிலாளர் நல அமைச்சகம், இதுபோன்று வேலைவாய்ப்பு பதிவு கட்டணங்கள், கமிஷன்கள் என எந்த வடிவில் பெற்றாலும் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரகத்தில் மீண்டும் போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் புதிய இரைகளை நோக்கி தங்கள் வலையை வீசுவதை கல்ஃப் நியூஸின் News Xpress புலனாய்வு குழு வெளிப்படுத்தியுள்ளது, இவர்கள் ஏற்கனவே 2011 ஆம் ஆண்டும் இதுபோன்ற ஸ்டிங் ஆபரேசன் நடத்தி இத்தகைய மோசடிகளை வெளிப்படுத்தியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பழைய உத்தியை மீண்டும் கையிலெடுத்துள்ள போலி நிறுவனங்கள் முதலில் 320 திர்ஹத்தை செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறும் ஒரு வாரத்தில் வேலையை கண்டிப்பாக பெற்றுத் தருவதாகவும் அடித்து விடுகின்றனர்.
இந்த போலிகளின் வாக்குறுதியை நம்பி நேர்முகத் தேர்வுக்குச் சென்றால், அந்த நேர்முகத் தேர்வு ஊடகங்களில் நிறுவனங்களால் ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டு நேரடியாக நடத்தப்பெறும் ஒன்றாக இருக்கும். இந்த நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பு போலி ஏஜென்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.
சிலவேளை அவர்களே பிற நிறுவனங்களில் பணியாற்றும் தெரிந்தவர்கள் மூலம் ஏற்படுத்தும் போலி நேர்முகத் தேர்வுகளையும் ஒப்புக்காக நடத்தி 320 திர்ஹம் முன்பதிவு கட்டணம் செலுத்திய ஏமாளிகளை நிராகரிக்கின்ற நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.
மேலும், நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்காவிட்டால் பதிவுக் கட்டணமாக செலுத்திய 320 திர்ஹம் திரும்பத் தரப்படும் என வேறு அவிழ்த்து விடுகின்றனர். இந்த தந்திரங்கள் அனைத்தும் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு அரசால் நசுக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தொழிலாளர் நல அமைச்சகம், இதுபோன்று வேலைவாய்ப்பு பதிவு கட்டணங்கள், கமிஷன்கள் என எந்த வடிவில் பெற்றாலும் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.