தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கிலப் பாடப்பிரிவு இளங்கலை, முதுகலை, எம்.பில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விழா நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. எம் உதுமான் முகையதீன் தலைமை உரை நிகழ்த்தினார். பேராசிரியைகள் திருமதி எம். ஏ தஸ்லீமா, இ. பிளோமினா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் அ.முகம்மது முகைதீன் ஊக்கமூட்டும் உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்காரவேலு விழா பேருரை ஆற்றினார்.
தொடக்கத்தில் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி பி. நாகஜோதி வரவேற்றார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர் சங்கரவடிவேலன் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் இளங்கலை இறுதி ஆண்டு மாணவி இ. புவனேஸ்வரி நன்றி கூறினார்.
இவ்விழாவில் காதிர் முகைதீன் கல்லூரியின் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
சர்வதேச அளவில் எங்கு பணியாற்றினாலும், இந்த கல்லூரியில் கற்றுக் கொண்ட ஒழுக்கம், கல்வி, கலாச்சாரம் போன்றவைகள் நிலைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர்களின் செயல்களையும் பொறுப்போடு கவனித்து சீர்படுத்தும் ஆசிரியர்கள் இக்கல்லூரியில் உள்ளனர். பெற்றோர் தரும் சுதந்திரத்தை, பொறுப்போடு மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொண்டு, வாழ்வில் முன்னேற உறுதிமொழி எடுக்க வேண்டும். செய்வீர்களா ......
ReplyDelete