சென்னை, செப்-21
தமிழக உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்ட டி.கே.ராஜேந்திரன் அவர்களை எம்.எம்.எஸ் பஷீர் அஹமது மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன், கடந்த செப். 6 முதல் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அவரிடம் சட்டம் - ஒழுங்கு டிஜிபி பணி முழு கூடுதல் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.எஸ் பஷீர் அஹமது, டி.ஐ.ஜி டி.கே.ராஜேந்திரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சந்திப்பின் போது இவரது புதல்வர்கள் எம்.எம்.எஸ் புஹாரி, எம்.எம்.எஸ் சம்சுதீன் உடன் இருந்தனர்.
சந்திப்பு குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.எஸ் பஷீர் அஹமது நம்மிடம் கூறியது:
'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அரசு அலுவலர்களோடும் - அரசியல் பிரமுகர்களோடும் நல்ல நட்புறவு பேணும் பழக்கத்தை மரியாதைக்குரிய காலஞ்சென்ற எங்கள் சாச்சா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.எஸ் அபுல் ஹசன் மரைக்காயர், எம்.எம்.எஸ் சுல்தான் அப்துல் காதர், எம்.எம்.எஸ் அப்துல் வஹாப் ஆகியோர் எங்களுக்கு கற்றுத்தந்தது. இந்த பழக்கத்தை இன்றளவும் எங்களது குடும்பத்தினர் பேணி வருகின்றோம்.
சமீபத்தில் உளவுத்துறை மற்றும் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட டி.கே.ராஜேந்திரன் அவர்கள் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். அப்போதிலிருந்து எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பரிச்சையமானவர். இன்று நேரில் சந்தித்து நாங்கள் வாழ்த்து கூறினோம். இந்த சந்திப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது' என்றார்.
தமிழக உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்ட டி.கே.ராஜேந்திரன் அவர்களை எம்.எம்.எஸ் பஷீர் அஹமது மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன், கடந்த செப். 6 முதல் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அவரிடம் சட்டம் - ஒழுங்கு டிஜிபி பணி முழு கூடுதல் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.எஸ் பஷீர் அஹமது, டி.ஐ.ஜி டி.கே.ராஜேந்திரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சந்திப்பின் போது இவரது புதல்வர்கள் எம்.எம்.எஸ் புஹாரி, எம்.எம்.எஸ் சம்சுதீன் உடன் இருந்தனர்.
சந்திப்பு குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.எஸ் பஷீர் அஹமது நம்மிடம் கூறியது:
'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அரசு அலுவலர்களோடும் - அரசியல் பிரமுகர்களோடும் நல்ல நட்புறவு பேணும் பழக்கத்தை மரியாதைக்குரிய காலஞ்சென்ற எங்கள் சாச்சா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.எஸ் அபுல் ஹசன் மரைக்காயர், எம்.எம்.எஸ் சுல்தான் அப்துல் காதர், எம்.எம்.எஸ் அப்துல் வஹாப் ஆகியோர் எங்களுக்கு கற்றுத்தந்தது. இந்த பழக்கத்தை இன்றளவும் எங்களது குடும்பத்தினர் பேணி வருகின்றோம்.
சமீபத்தில் உளவுத்துறை மற்றும் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட டி.கே.ராஜேந்திரன் அவர்கள் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். அப்போதிலிருந்து எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பரிச்சையமானவர். இன்று நேரில் சந்தித்து நாங்கள் வாழ்த்து கூறினோம். இந்த சந்திப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.