.

Pages

Sunday, September 25, 2016

ஷார்ஜாவில் சைபர் கிரைம் குற்றவாளிக்கு 2.5 லட்சம் திர்ஹம் அபராதம் !

அதிரை நியூஸ்:
ஷார்ஜா, செப்-25
உலகெங்கும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் சைபர் கிரைம் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே என்றாலும் எளிதில் ஏமாறும் ஏமாளிகளும் அவர்களே, மெத்தப்படித்தவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

அப்படி ஒரு கூடாநட்பு இன்றைய சமூக ஊடகங்கள் வழியாக ஓரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் ஏற்பட உடனே அந்த ஆணுக்கு தனது புகைப்படங்களை சகட்டுமேனிக்கு நம்பி அனுப்பியுள்ளார் இந்தப் பெண்.

விளைவு, புகைப்படங்களை சேமித்து வைத்துக் கொண்ட அந்த காமுகன் சமூக ஊடகங்களில் பரப்பி விடுவேன் என மிரட்ட அந்தப்பெண் விபரமாக சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்க, பிடிபட்டான் அந்த எச்சை.

ஷார்ஜா ஷரியா கோர்ட்டில் தனது குற்றத்தை அவன் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து 2.5 லட்சம் திர்ஹத்தை கட்டு என ஓங்கி மண்டையில் அடித்துள்ளது. பேத்தனமா! போட்டோக்களை அனுப்பிய அவளுக்கும் ஒரு தண்டனை கிடைச்சிருந்த மற்ற ஏமாளிகளுக்கும் ஒரு எச்சரிக்கை பாடமாக அமைந்திருக்கும்.

ஊகும், இந்த நீதிபதியை இந்தியாவிற்கு அனுப்பி குற்றவாளிகளுக்கு தையல் மெஷின் கொடுப்பது எவ்வாறு என பாடம் படிக்கச் சொல்லனும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.