தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 21வது வார்டுக்கு உட்பட்ட சிஎம்பி லேன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் பழுதடைந்து கீழே சாய்ந்து விழும் நிலையில் இருந்து வந்தது. இதனால் இப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் கடந்து சென்றனர். இதுகுறித்து இப்பகுதி கவுன்சிலர் முகமது இபுராகிமிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு அதன் அருகில் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. அதிரை மின்சார வாரிய ஊழியர்கள் 6 பேர் பணியாற்றினர். இதன் பணிகளை இப்பகுதி கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் நேரில் பார்வையிட்டு இவர்களுக்கு வேண்டிய உதவியை உடனிருந்து செய்து கொடுத்தார்.
இதுகுறித்து கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் நம்மிடம் கூறுகையில்...
அதிரை பேரூராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி சிஎம்பி லேன் இஸ்மாயில் பெட்டிக்கடை அருகில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மின்கம்பம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அதிரை மின்சார வாரியம் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்று உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டேன். மேலும் அதிரை பேரூராட்சி உதவி இயக்குனர் மூலம் துரித நடவடிக்கை எடுத்து வந்தேன். இந்நிலையில் இன்று பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்பட்டு புதிய மின்கம்பம் நடப்பட்டது. அதிரை மின்வாரிய ஊழியர்கள் 6 பேர் பணியாற்றினார்கள். இவர்களுக்கு வேண்டிய உதவியை உடனிருந்து செய்து கொடுத்தேன். எங்கள் பகுதி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தந்த மின்சார வாரியத்திற்கும், உயர் அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்றார்.
aama election varuthula ellam seivaanga
ReplyDelete