அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, செப்- 24
1744 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1157) முஹமது பின் சவூது எனும் பழங்குடி இன குறுமன்னரால் தற்போதைய ரியாத் நகரை ஒட்டியுள்ள அல் திரிய்யா எனும் பகுதியில் இன்றைய பரந்துபட்ட சவுதி அரேபியாவின் ஆட்சிக்கான ஆரம்பப்புள்ளி தோற்றுவிக்கப்பட்டது.
கிங்டம் ஆஃப் சவுதி அரேபியா (Kingdom of Saudi Arabia) என இன்று அனைவராலும் அழைக்கப்படும் நாட்டின் முந்தைய பெயர் இன்றைய சவுதியின் இரு பெரும் மாகாணங்களை குறிக்கும் வகையில் 'கிங்டம் ஆஃப் ஹிஜாஸ் அன்ட் நஜ்து' (Kingdom of Hijas and Najd) என 1931 ஆம் ஆண்டு வரை அழைக்கப்பட்டது.
1902 முதல் 1927 வரை நடைபெற்ற பல போர்களின் விளைவாக ஹிஜாஸ், நஜ்து எனும் இரு பெரும் நிலப்பரப்பையும் பல குறுமன்னர்கள் ஆண்ட பகுதிகளையும் ஒன்றிணைத்து தனது நிலையான ஆட்சியின் கீழ் கொண்டு வந்த சவுதி அரேபியாவின் தந்தை என அழைக்கப்படும் மன்னர் அப்துல் அஜீஸ் அல் சவூது அவர்களுடைய ஆட்சி காலத்தில், அவருடைய உத்தரவின் பேரில் சவுதி அரசாங்க பத்திரிக்கையான 'உம்மல் குரா'வில் (Um Al Qura) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு சவுதி அரேபியா எனும் புதிய பெயர் மாற்றம் நிகழ்ந்தது.
அதாவது, ஹிஜ்ரி 1351 ஆம் வருடம் ஜமாத்துல் அவ்வல் பிறை 21 அன்று முதல் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது அதாவது 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி முதல், அதன்படி நேற்று (23.09.2016 வெள்ளிக்கிழமை) சவுதி அரேபியா தனது 86 வது தேசிய தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளது.
படங்கள் குறித்த விளக்கம்:
1. அன்றைய ஜித்தா கவர்னர் ஷேக் அப்துல்லா அலி ரெதா அவர்களுடன் மன்னர் அப்துல் அஜீஸ் அல் சவூது அவர்கள்.
2. இரு பெரும் மாகாணங்களாக திகழ்ந்த ஹிஜாஸ் மற்றும் நஜ்தை குறிக்கும் வரைபடம்.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
சவூதி அரேபியா, செப்- 24
1744 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1157) முஹமது பின் சவூது எனும் பழங்குடி இன குறுமன்னரால் தற்போதைய ரியாத் நகரை ஒட்டியுள்ள அல் திரிய்யா எனும் பகுதியில் இன்றைய பரந்துபட்ட சவுதி அரேபியாவின் ஆட்சிக்கான ஆரம்பப்புள்ளி தோற்றுவிக்கப்பட்டது.
கிங்டம் ஆஃப் சவுதி அரேபியா (Kingdom of Saudi Arabia) என இன்று அனைவராலும் அழைக்கப்படும் நாட்டின் முந்தைய பெயர் இன்றைய சவுதியின் இரு பெரும் மாகாணங்களை குறிக்கும் வகையில் 'கிங்டம் ஆஃப் ஹிஜாஸ் அன்ட் நஜ்து' (Kingdom of Hijas and Najd) என 1931 ஆம் ஆண்டு வரை அழைக்கப்பட்டது.
1902 முதல் 1927 வரை நடைபெற்ற பல போர்களின் விளைவாக ஹிஜாஸ், நஜ்து எனும் இரு பெரும் நிலப்பரப்பையும் பல குறுமன்னர்கள் ஆண்ட பகுதிகளையும் ஒன்றிணைத்து தனது நிலையான ஆட்சியின் கீழ் கொண்டு வந்த சவுதி அரேபியாவின் தந்தை என அழைக்கப்படும் மன்னர் அப்துல் அஜீஸ் அல் சவூது அவர்களுடைய ஆட்சி காலத்தில், அவருடைய உத்தரவின் பேரில் சவுதி அரசாங்க பத்திரிக்கையான 'உம்மல் குரா'வில் (Um Al Qura) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு சவுதி அரேபியா எனும் புதிய பெயர் மாற்றம் நிகழ்ந்தது.
அதாவது, ஹிஜ்ரி 1351 ஆம் வருடம் ஜமாத்துல் அவ்வல் பிறை 21 அன்று முதல் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது அதாவது 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி முதல், அதன்படி நேற்று (23.09.2016 வெள்ளிக்கிழமை) சவுதி அரேபியா தனது 86 வது தேசிய தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளது.
படங்கள் குறித்த விளக்கம்:
1. அன்றைய ஜித்தா கவர்னர் ஷேக் அப்துல்லா அலி ரெதா அவர்களுடன் மன்னர் அப்துல் அஜீஸ் அல் சவூது அவர்கள்.
2. இரு பெரும் மாகாணங்களாக திகழ்ந்த ஹிஜாஸ் மற்றும் நஜ்தை குறிக்கும் வரைபடம்.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.