.

Pages

Wednesday, September 21, 2016

'வெறுப்பு அரசியலை நிறுத்து' என்ற முழக்கத்துடன் அதிரையில் தீவிர தெருமுனைப் பிரச்சாரக்கூட்டங்கள் !

அதிராம்பட்டினம், செப்-21
பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் 'வெறுப்பு அரசியலை நிறுத்து' என்கிற முழக்கத்துடன் குமரி முதல் டெல்லி வரை தேசிய அளவிலான பிரச்சாரம் செப்டம்பா் 1 முதல் 30 வரை நடக்கிறது.

இதையொட்டி அதிராம்பட்டினம் பகுதிகளில் தீவிர தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் நிஜாம் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். இவ்வமைப்பின் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயில் பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். மேலும் கடைத்தெரு, பேருந்து நிலையம், மேலத்தெரு உள்ளிட்ட 4 இடங்களில் தெருமுனை பிரச்சாராம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.