.

Pages

Thursday, September 29, 2016

அதிரை பேரூராட்சி 15,18 வது வார்டுகளில் போட்டியிட 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் !

அதிராம்பட்டினம், செப்-29
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

இதையொட்டி, வேட்பு மனுக்கள் பெறுவது கடந்த ( 26-09-2016 ) அன்று முதல் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் அந்தந்த உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை அளித்து வருகின்றனர். பிரதான அரசியல் கட்சிகள் நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை அளிப்பதில் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை அதிரை பேரூராட்சி 18 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிராம்பட்டினம், மேல நெயக்காரத் தெருவை சேர்ந்த அஹமது பஷிருல்லா மகன் நூர் முஹம்மது ( வயது 47 ) அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  வழங்கினார்.

அதேபோல், அதிரை பேரூராட்சி 15 வது வார்டில் போட்டியிட சுயேட்சையாக விருப்பம் தெரிவித்து அதிராம்பட்டினம், மேலநெயக்காரத் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது மகள் சிராஜுநிஷா ( வயது 22 ) அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார். 

6 comments:

  1. 15 வது வார்டு பெண் வேட்பாளர் அல்லவா ??

    ReplyDelete
  2. 15 வது வார்டு பெண் வேட்பாளர் அல்லவா ?

    ReplyDelete
  3. 15 வது வார்டு பெண் வேட்பாளர் அல்லவா ?

    ReplyDelete
  4. பிழை திருத்தம் செய்யபட்டுள்ளது... (அதிரை நியூஸ்)

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.