.

Pages

Monday, September 26, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய அளவிலான ஆராய்ச்சி கருத்தரங்கம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், செப்-26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் துறை சார்பாக தேசிய அளவிலான ஆராய்ச்சி கருத்தரங்கம் நேற்று சனிக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் அவர்கள் தலைமையுரையாற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார். கருத்தரங்கில் வேதியியல் துறை தலைவர் முனைவர் பி. முகம்மது சிராஜீதீன் அவர்கள் ஆராய்ச்சி தலைப்பை அறிமுகப்படுத்தினார்.

கருத்தரங்கில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் எம். முகம்மது அமானுல்லாஹ், சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ஏ.பாண்டுரங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

தொடக்கத்தில் வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் செய்யது தமீம் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் பிரேம் நவாஸ் நன்றி கூறினார்.

கருத்தரங்கில் 28 க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டார்கள். இக்கருத்தரங்கில் 42 ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரையைச் சமர்பித்தார்கள். இந்த கருத்தரங்கில் ஆராய்ச்சி கட்டுரை மலரை முதல்வர் முனைவர் ஏ.எம். உதுமான் முகையதீன், விழா அமைப்பு செயலாளர் பேராசிரியர் முனைவர் என்.ஏ முகம்மது பாரூக் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.