அதிரை நியூஸ்: துபாய், செப்-28
துபாயில் 'ரென்ட் ஏ கார்' (Rent a Car) என்கிற நாள் வாடகை அடிப்படையில் பெறப்படும் கார்களை 1 மணிநேரம் பயன்படுத்தினாலும் சரி அல்லது 24 மணிநேரம் பயன்படுத்தினாலும் சரி முழுமையாக நாள் வாடகையே வசூலிக்கப்பட்டு வருகின்றன.
மிக விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டத்தின் அடிப்படையில் 'ரென்ட் ஏ கார்'களை 1 மணிநேரம், 2 மணிநேரம் என அதிகபட்சம் 6 மணிநேரம் வரை வாடகைக்கு எடுக்க முடியும், அதற்கு மேல் முழுநாள் வாடகை தான் என்றாலும் இப்படி மணிக்கணக்கில் எடுக்கப்படும் கார்களை துபைக்குள் மட்டுமே இயக்க முடியும். பிற அமீரகங்களுக்குள் கொண்டு செல்வதை GPS கருவிகள் கண்காணித்து துபை போக்குவரத்துத் துறைக்கும், வாடகை கார் நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தும்.
மேலும், மணிக்கணக்கில் வாடகை கார்களை இயக்க விரும்பும் நிறுவனங்கள் டேக்ஸி நிறுவனங்களை போல் முறையாக துபை போக்குவரத்துத் துறையிடம் (RTA) தனியார் டேக்ஸி நிறுவனம் என பதிந்து முன்அனுமதி பெற்றே இயக்க முடியும். மேலும் இந்த வகை லைசென்ஸ் பெற்றுள்ள நிறுவனங்கள் மெட்ரோ மற்றும் டிராம் நிலையங்களிலிருந்து பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லவும் அனுமதிக்கப்படுவர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபாயில் 'ரென்ட் ஏ கார்' (Rent a Car) என்கிற நாள் வாடகை அடிப்படையில் பெறப்படும் கார்களை 1 மணிநேரம் பயன்படுத்தினாலும் சரி அல்லது 24 மணிநேரம் பயன்படுத்தினாலும் சரி முழுமையாக நாள் வாடகையே வசூலிக்கப்பட்டு வருகின்றன.
மிக விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டத்தின் அடிப்படையில் 'ரென்ட் ஏ கார்'களை 1 மணிநேரம், 2 மணிநேரம் என அதிகபட்சம் 6 மணிநேரம் வரை வாடகைக்கு எடுக்க முடியும், அதற்கு மேல் முழுநாள் வாடகை தான் என்றாலும் இப்படி மணிக்கணக்கில் எடுக்கப்படும் கார்களை துபைக்குள் மட்டுமே இயக்க முடியும். பிற அமீரகங்களுக்குள் கொண்டு செல்வதை GPS கருவிகள் கண்காணித்து துபை போக்குவரத்துத் துறைக்கும், வாடகை கார் நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தும்.
மேலும், மணிக்கணக்கில் வாடகை கார்களை இயக்க விரும்பும் நிறுவனங்கள் டேக்ஸி நிறுவனங்களை போல் முறையாக துபை போக்குவரத்துத் துறையிடம் (RTA) தனியார் டேக்ஸி நிறுவனம் என பதிந்து முன்அனுமதி பெற்றே இயக்க முடியும். மேலும் இந்த வகை லைசென்ஸ் பெற்றுள்ள நிறுவனங்கள் மெட்ரோ மற்றும் டிராம் நிலையங்களிலிருந்து பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லவும் அனுமதிக்கப்படுவர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.