அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் அக்-19 ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அதிரையின் பிரதான அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை அளித்து வருகின்றனர். நேற்று மாலை நிலவரப்படி இதுவரையில் 33 பேர் வேட்பு மனுக்கள் அளித்துள்ளனர்.
திமுக சார்பில் 14 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய அறிமுகம்:
பெயர்: இஸ்மாயில் நாச்சியா
கணவர் பெயர்: முஹம்மது சரீப் ( என்.கே.எஸ் சவுண்ட் சர்வீஸ் முஹம்மது செக்கரியா பேரன் )
வயது: 36
படிப்பு: உயர்நிலை
தொழில்: குடும்ப பராமரிப்பு
போட்டியிடும் கட்சி: திமுக
கட்சி பதவி: திமுக வார்டு செயலாளர், பேரூர் செயற்குழு உறுப்பினர் ( கணவர் )
சேவை அனுபவம்: பள்ளி கல்விக்குழு தலைவர், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர், ( கணவர் )
அரசியல் அனுபவம்: 15 ஆண்டுகள் ( கணவர் )
போட்டி வேட்பாளர்கள்: ஹாஜா பகுருதீன் ( அதிமுக ), முஹம்மது தம்பி ( எஸ்.டி.பி.ஐ )
வாக்குறுதிகள்:
1. தார் சாலை வசதி
2. வடிகால் வசதி
3. குடிநீர் வசதி
4. கழிப்பறை வசதி திட்டம்
5. வார்டு பகுதியின் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்துதல்
6. வார்டு பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்.
7. வாக்காளர் அடையாள அட்டை திருத்தங்கள்/பெயர் சேர்த்தல் நிறைவேற்றுதல்
8. குடும்ப அட்டை ஏற்பாடு செய்து கொடுத்தல்.
9. அரசின் நலதிட்ட உதவிகள் பெற வழிவகை செய்தல்
10. வார்டு பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பிகளை மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
நமது கலாச்சாரத்துக்கு பெண்கள் ஆட்சி செய்ய ஒத்து வராது பெண்களுக்கே ஒதுக்கக் கூடாது என்ற ஆதங்கம் இருக்கும்போது ஆண்கள் போட்டியிடத்தகுந்த இந்த தொகுதியில் பெண் போட்டியிடுவது விசித்திரமாக
ReplyDeleteஉள்ளது எதிர்காலத்தில் கூட தேர்தல் கமிசனில் முறையிட்டு எங்க்கள் பெண்களுக்கு ஒதுக்க வேண்டாம் என்று என முறையிடவும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.
ReplyDeleteநமது கலாச்சாரத்துக்கு பெண்கள் ஆட்சி செய்ய ஒத்து வராது பெண்களுக்கே ஒதுக்கக் கூடாது என்ற ஆதங்கம் இருக்கும்போது ஆண்கள் போட்டியிடத்தகுந்த இந்த தொகுதியில் பெண் போட்டியிடுவது விசித்திரமாக
உள்ளது எதிர்காலத்தில் கூட தேர்தல் கமிசனில் முறையிட்டு எங்க்கள் பெண்களுக்கு ஒதுக்க வேண்டாம் என்று என முறையிடவும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.
// வார்டு பகுதியின் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்துதல்// என்ற கோரிக்கையை போட்டியிடும் எல்லா வேட்பாளரும் சொல்லுகிறார்கள் அவர்களின் வீடு பக்கத்திலுள்ள வீடு சுத்தமாக இருக்கன்னு பாருங்க??? பின்னே எப்படி நிறைவேற்றுவேன் என்று சொல்லுகிறார்கள் .. கேட்கிறவன் கேனயன் என்றால் எறும்புக்கூட ஏரோபிளேனை இழுக்கும் என்பான்"
ReplyDelete