அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் அக்-19 ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அதிரையின் பிரதான அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை அளித்து வருகின்றனர். நேற்று மாலை நிலவரப்படி இதுவரையில் 33 பேர் வேட்பு மனுக்கள் அளித்துள்ளனர்.
திமுக சார்பில் 18 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய அறிமுகம்:
பெயர்: முகமது சேக்தாவூது
தகப்பனார் பெயர்: நெய்னா முகமது
வயது: 41
படிப்பு: B.Com.,
தொழில்: பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் 'பிளாட்டினம்' எலக்ட்ரிக்கல் & பிளம்பிங் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.
போட்டியிடும் கட்சி: திமுக
சேவை அனுபவம்: சமூக ஆர்வலர்
அரசியல் அனுபவம்: புதியவர்
போட்டியாளர்கள்: அப்துல் ரஹ்மான் ( அதிமுக ), நூர் முஹம்மது ( சுயேட்சை)
வாக்குறுதிகள்:
1. தார் சாலை வசதி
2. வடிகால் வசதி
3. குடிநீர் வசதி
4. வார்டு பகுதியில் தேங்கி காணப்படும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்துதல்
5. வார்டு பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்.
6. மரக்கன்றுகள் நடப்படும்
7. மாதினுள் ஹசனத்தில் இஸ்லாமிய சங்கம் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கப்படும்.
பொதுநலத்தொண்டில் அக்கறையுள்ளவர்கள் இதுவரை வேட்புமனு அளித்ததாக தெரியவில்லை. அரசியல் நமக்கு ஒத்துவராது என்று நினைத்து விட்டார்களா? பண்டிகைக்காலங்களில் அதிரடி சலுகைகள் அறிவிப்பதுப்போல் போட்டியிடும் வேட்பாளர்களும் அள்ளிவீசுகிறார்கள். இனி மரம் நடுவதை விட யாரோ நட்டமரத்துக்கு தண்ணீர் விட்ட சமூக சேவகன் தான் தேவை அப்படிப்பட்ட தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
ReplyDeleteமரம் நடுவதை விட யாரோ நட்டமரத்துக்கு தண்ணீர் விட்ட சமூக சேவகன் தான் தேவை அப்படிப்பட்ட தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
ReplyDeleteமரம் நடுவதை விட யாரோ நட்டமரத்துக்கு தண்ணீர் விட்ட சமூக சேவகன் தான் தேவை அப்படிப்பட்ட தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்! அருமையான குணம் படைத்தவர்!ஜெய்தபின் சிலரை பார்க்கவே முடியாது ஆனால் இவரை பார்க்க முடியும்!(பார்க்-வே-ஐஸ்கிரீம் சாப் இருக்கா)?
ReplyDeleteமரம் நாடுவதாய் இருந்தால் வேப்பமரம் நடுங்கள்!அதன் காற்று சுவாசத்துக்கு நல்லது !
ReplyDelete