அதிரை நியூஸ்:
துபாய், அக்-12
துபையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு சர்வதேச எக்ஸ்போ நடைபெறவுள்ள நிலையில் அதனையொட்டி பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது துபையின் முக்கிய போக்குவரத்து சாதனமாக மாறியுள்ள மெட்ரோ ரயில் இயக்கத்தை இன்னும் 15 கி.மீ தூரத்திற்கு விரிவுபடுத்திட துபை போக்குவரத்துக் கழகம் ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மேற்படி ஒப்பந்தப்படி 2019 ஆம் ஆண்டு சோதனை ஓட்டங்கள் துவங்கி, 2020 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி முதல் புதிய மெட்ரோ தடம் போக்குவரத்திற்கு திறக்கப்படும், அதாவது எக்ஸ்போ 2020 துவங்கும் 5 மாதங்களுக்கு முன்.
7 மெட்ரோ நிலையங்களில் 5 மேலெழுந்த நிலையிலும் 2 பூமிக்கு கீழும் அமையவுள்ளதால் 11.8 கி.மீ தடம் மேலெழுந்த நிலையிலும் 3.2 கி.மீ பூமிக்கு அடியிலும் அமைக்கப்படவுள்ளன.
ரெட் லைனில் உள்ள அல் நகீல் ஹார்பர் அன்ட் டவர் மெட்ரோ நிலையத்தை சந்திப்பு நிலையமாகவும் (Transfer Station) எக்ஸ்போ சைட் ஸ்டேஷனை முடிவு நிலையமாகவும் கொண்டுள்ள இத்திட்டத்தின் கீழ் கார்டன்ஸ், டிஸ்கவரி கார்டன்ஸ், அல் புர்ஜான், ஜூமைரா கோல்டு எஸ்டேட்ஸ் மற்றும் துபை இன்வெஸ்ட்மென்ட் பார்க் ஆகிய மெட்ரோ நிலையங்களுக்கிடையே 15 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும், தற்போது கிரீன் லைனில் தினமும் இயக்கப்படும் 79 ரயில்களுடன் கூடுதலாக 35 புதிய மெட்ரோ ரயில்களும் இயக்கப்படும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபாய், அக்-12
துபையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு சர்வதேச எக்ஸ்போ நடைபெறவுள்ள நிலையில் அதனையொட்டி பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது துபையின் முக்கிய போக்குவரத்து சாதனமாக மாறியுள்ள மெட்ரோ ரயில் இயக்கத்தை இன்னும் 15 கி.மீ தூரத்திற்கு விரிவுபடுத்திட துபை போக்குவரத்துக் கழகம் ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மேற்படி ஒப்பந்தப்படி 2019 ஆம் ஆண்டு சோதனை ஓட்டங்கள் துவங்கி, 2020 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி முதல் புதிய மெட்ரோ தடம் போக்குவரத்திற்கு திறக்கப்படும், அதாவது எக்ஸ்போ 2020 துவங்கும் 5 மாதங்களுக்கு முன்.
7 மெட்ரோ நிலையங்களில் 5 மேலெழுந்த நிலையிலும் 2 பூமிக்கு கீழும் அமையவுள்ளதால் 11.8 கி.மீ தடம் மேலெழுந்த நிலையிலும் 3.2 கி.மீ பூமிக்கு அடியிலும் அமைக்கப்படவுள்ளன.
ரெட் லைனில் உள்ள அல் நகீல் ஹார்பர் அன்ட் டவர் மெட்ரோ நிலையத்தை சந்திப்பு நிலையமாகவும் (Transfer Station) எக்ஸ்போ சைட் ஸ்டேஷனை முடிவு நிலையமாகவும் கொண்டுள்ள இத்திட்டத்தின் கீழ் கார்டன்ஸ், டிஸ்கவரி கார்டன்ஸ், அல் புர்ஜான், ஜூமைரா கோல்டு எஸ்டேட்ஸ் மற்றும் துபை இன்வெஸ்ட்மென்ட் பார்க் ஆகிய மெட்ரோ நிலையங்களுக்கிடையே 15 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும், தற்போது கிரீன் லைனில் தினமும் இயக்கப்படும் 79 ரயில்களுடன் கூடுதலாக 35 புதிய மெட்ரோ ரயில்களும் இயக்கப்படும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.