.

Pages

Wednesday, October 26, 2016

அதிரை பேருந்து நிலையத்தில் மத்திய பாஜக அரசைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி பங்கேற்பு !

அதிராம்பட்டினம், அக்-26
இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முனைப்பு காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் கிளை சார்பில் எதிர்வரும் ( 28-10-2016 ) வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச்செயலரும், நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம். தமீமுன் அன்சாரி எம்எல்.ஏ கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்த உள்ளார். இதில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மஜக அதிராம்பட்டினம் கிளை சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

1 comment:

  1. தமிழ் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றுகூடி ஒரே குரலில் நமது எதிர்ப்பை காட்டவேண்டும்.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் வந்திடும்தாழ்வு

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.