.

Pages

Thursday, October 27, 2016

மின்னொளியில் ஜொலிக்கும் செடியன் குளம் !

அதிராம்பட்டினம், அக்-27
அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் அமைந்துள்ளன. மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு மிக்கது. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் நீராட பயன்படுகிறது. மேலும் ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை இப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை நீரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குளத்தில் தற்போது தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.

குளத்தின் கரைப்பகுதிகளில் 5 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் இருந்த போதிலும், அதில் எதிலும் மின்விளக்குகள் பொருத்தப்படததால் இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கி காணப்பட்டது. இதனால் இப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் கடந்து சென்றனர். இதுகுறித்து அறிந்த இப்பகுதி சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு எடுத்துச்சென்றனர்.

இதில், அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) அமீரகம் அமைப்பின் சார்பில் செடியன் குளக்கரை வடக்கு பகுதி மின்கம்பத்தில் குளக்கரை முழுவதும் ஒளி படரும் வகையில் மின்விளக்கு ஒன்று பொருத்த ஏற்பாடு செய்தனர். கடந்த வாரம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் செடியன் குளம் இரவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. இதனால் இப்பகுதியினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். TIYA நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

6 comments:

  1. செழியன் குளமா?செடியன் குளமா?பாண்டியர்கள் நம் ஊரைஆண்ட காலத்தில் செழியன் என்ற மன்னன் இந்தக்குளத்தை வெட்டியதாக ஒரு புத்தகத்தில்படித்தேன்.

    ReplyDelete
  2. செழியன் குளமா?செடியன் குளமா?பாண்டியர்கள் நம் ஊரைஆண்ட காலத்தில் செழியன் என்ற மன்னன் இந்தக்குளத்தை வெட்டியதாக ஒரு புத்தகத்தில்படித்தேன்.

    ReplyDelete
  3. செடியன் குளம் அல்லது செழியன் குளம் ஒரு காலத்தில் இதுவே இன்னொரு தாயாக இருந்தது.

    ReplyDelete
  4. வரலாறு முக்கியம் அமைச்சரே,,,,,

    ReplyDelete
  5. வரலாறு முக்கியம் அமைச்சரே,,,,,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.