.

Pages

Saturday, October 15, 2016

அதிரை பேரூந்து நிலையத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த ப்ளக்ஸ் பேனர்கள் பறிமுதல்: அதிரடி நடவடிக்கையில் தாசில்தார் !

அதிராம்பட்டினம், அக்-15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த வர்த்தக நிறுவனங்களின் விளம்பர பிளக்ஸ் போர்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கிணங்க, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் ராஜகுமாரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மகர ஜோதி, அருள்மொழி ஆகியோர் அதிராம்பட்டினம் பேரூராட்சி ஊழியர்களின் உதவியோடு அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், ஈசிஆர் சாலை பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த வர்த்தக நிறுவனங்களின் விளம்பர பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்ட அனைத்து வித ப்ளக்ஸ் பேனர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.