.

Pages

Saturday, October 29, 2016

அதிரையில் தீபாவளி பண்டிகை உற்சாகக்கொண்டாட்டம் !

அதிராம்பட்டினம், அக்-29
தீபாவளி பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தீய எண்ணங்கள், தீய செயல்கள் அழிந்து வாழ்க்கையில் ஒளி பிறக்கும் நாளாக தீபாவளி கருதப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு, கரையூர் தெரு, காந்திநகர், முத்தம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டன. இதையொட்டி மக்கள் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியடைந்தனர். உறவினர்கள், அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் வழங்கி மகிழ்ந்தனர்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.