தீபாவளி பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தீய எண்ணங்கள், தீய செயல்கள் அழிந்து வாழ்க்கையில் ஒளி பிறக்கும் நாளாக தீபாவளி கருதப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு, கரையூர் தெரு, காந்திநகர், முத்தம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டன. இதையொட்டி மக்கள் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியடைந்தனர். உறவினர்கள், அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் வழங்கி மகிழ்ந்தனர்.
Diwali wishes to all
ReplyDelete