அதிராம்பட்டினம், ஜன-17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி இங்குள்ள பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு எம்எல்ஏ சி.வி. சேகர் தலைமை வகித்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்ததும் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து அங்கு அதிமுக கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் எம். ஜெயப்பிரகாஷ் நாராயணன், அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி. சுப்பிரமணியன், அதிரை பேரூர் செயலர் ஏ. பிச்சை, அவைத்தலைவர் முண்டாசு காதர், துணைச்செயலர் முகமது தமீம், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைத்தலைவர் எம்.பி அபூபக்கர், செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ், தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சேதுராமன், எம்ஜிஆர் இளைஞர் அணி அதிரை பேரூர் செயலாளர் சிவக்குமார், முன்னாள் கவுன்சிலர் உதயகுமார், மு.க.செ அப்துல் ரஹ்மான், மு.க.செ ரபீக், அஹமது தாகிர், முஹம்மது ஹனீபா, அப்டா தமீம், ஹாஜா பகுரூதீன், யஹ்யாகான், பகுருதீன், அ.மு அப்துல் வஹாப், லியாகத் அலி, அசோக், காமராஜ், பார்த்தசாரதி, சாகுல்ஹமீது உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.