.

Pages

Tuesday, January 17, 2017

அதிரையில் 'இளம் இஸ்லாமியன்' மார்க்க அறிவித்திறன் போட்டி பரிசளிப்பு விழா !

அதிராம்பட்டினம், ஜன-17
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் தன்னார்வல இளைஞர்களால் ஆண்டுதோறும் 'இளம் இஸ்லாமியன்' என்ற பெயரில் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்த வருடமும் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்படுள்ளதை அடுத்து இதன் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் பள்ளிக்கூடம் மற்றும் மதரசா கல்வி பயிலும் மாணவர்கள் பலர் முன்பதிவு செய்தனர்.

இதையடுத்து கடந்த 14-01-2017 அன்று, இதன் போட்டி தேர்வுகள் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முன்னிலையில் அதிரை,  சிஎம்பி லேன் ஏ.எல் மெட்ரிக். பள்ளியில் நடந்தது. இதில் 100 க்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், போட்டித்தேர்வில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா திங்கட்கிழமை மாலை செக்கடி குளம் அருகில் நடைபெற்றது. விழாவிற்கு மவ்லவி ஹைதர் அலி தலைமை வகித்தார். மவ்லவி முப்தி அப்துல் ஹாதி முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட வந்தவாசி உமர் பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி வி.கே.எம் ஹசன் பசரி பாகவி, 'பிள்ளைகள் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள்' என்ற தலைப்பிலும், மதுரை மஸ்ஜீத்துன் நபவி தலைமை இமாம் எஸ்.பிரோஸ்கான் அல்-புஹாரி, 'பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள்' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. முதல் பிரிவில் M.Y.அஹமது (முதல் பரிசு ), S.அபூபக்கர் ( இரண்டாம் பரிசு ), சாதிக் ( மூன்றாம் பரிசு ) ஆகியோர் பெற்றனர். இரண்டாம் பிரிவில் M.S.சஹல் (முதல் பரிசு), ஜெ.அஹமது தஸ்லீம் ( இரண்டாம் பரிசு ), ஃபாரிஸ் (மூன்றாம் பரிசு ) ஆகியோர் பெற்றனர். மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுச்சான்றிதழ், ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழா ஏற்பாட்டினை இளம் இஸ்லாமியன் விழா குழுவினர் செய்தனர். இந்த விழாவில் மார்க்க அறிஞர்கள், ஜமாத்தார்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.