.

Pages

Wednesday, January 4, 2017

வியட்நாமில் 18 வருடங்களுக்குப் பின் வயிற்றில் இருந்து கத்திரிக்கோல் அகற்றம் !

அதிரை நியூஸ்: ஜன-04
மா வான் ந்ஹாட் (Ma Van Nhat - எனக்கு இப்படித்தான், நீங்கள் எப்படி உச்சரிக்கிறீர்கள்?) என்கிற 58 வயதுடைய வியட்நாம் நபருக்கு 1998 ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் விபத்தை தொடர்ந்த வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வழமைபோல் சாப்பிடுவது, குளிப்பது போன்ற இயற்கையான காரியங்களில் எந்த பிரச்சனைகளும் இன்றி சுமார் 18 வருடங்களாக ஈடுபட்டுவந்தார்.

இந்நிலையில் திடீர் என கடும் வயிற்றுவலி அவதிப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவருக்கு அல்ட்ராசோனிக் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது தான் தெரிந்தது அவருடைய வயிற்றில் அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படும் 15 செ.மீ. நீளமுள்ள கத்திரிகோல் ஒன்று உள்ளிருப்பது.

வியட்னாம் தலைநகர் ஹனோய் நகரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவிலுள்ள ஒரு மருத்துவமனையில் சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற மறுஅறுவை சிகிச்சைக்குப்பின் வயிற்றிலிருந்து வெற்றிகரமாக கத்திரிக்கோல் அகற்றப்பட்டதை தொடர்ந்து மா வான் ந்ஹாட் உடல்நலம் தேறி வருவதாகவும், வயிற்றுக்குள் கத்திரிக்கோலை வைத்து தைத்த மருத்துவரை வலைவீசி தேடிவருவதாகவும் வியட்நாம் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

Source: The Hindustan Times / Mailonline
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.