அதிரை நியூஸ்: துபாய், ஜன-04
இன்று (ஜனவரி 4) துபையின் ஆட்சியாளராக பதவியேற்ற 10வது ஆண்டின் துவக்கத்தை சிறப்பிக்கும் வகையில் 'உணவு வங்கி' (Food Bank) திட்டத்தை துவக்கி வைத்தார் ஷேக் முஹமது பின் ராஷித் அவர்கள், இதன் மூலம் வளைகுடா பகுதியில் உணவை வீணடிக்காத பிராந்தியமாக துபை உருவாக்கவுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
துபை அரசின் துணையுடன் செயல்படும் தர்ம அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்பட இருக்கும் இந்த உணவு வங்கி நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பண்ணைகள் என உணவுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தளங்களிலிருந்தும் மீதமாகும் கெடாத உணவுகள் திரட்டப்பட்டு, சுகாதாரமான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு தன்னார்வத் தொண்டர்கள், பங்களிப்பாளர்கள் உதவியுடன் அமீரகத்திற்குள்ளும், பிற நாடுகளிலும் தேவையுடையோருக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக சர்வதேச அளவில் செயல்படும் பல தொண்டு நிறுவனங்களுடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளப்படும்.
மேலும் தேதி காலாவதியான (Date Expired), கெட்டுப்போன உணவுகளை (Inedible) கூட வீணடிக்காமல் மறுசுழற்சி (Recycle) செய்து உரம், ரசாயனம், மருத்துவ ஆய்வு போன்ற பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் துபை மாநகரம் பூஜ்ய உணவு விரய மாநகராக (Zero Food Wastage City) உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆண்டொன்றுக்கு சுமார் 13 பில்லியன் திர்ஹம் மதிப்புள்ள உணவுகள் வீணடிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. துபை மாநகராட்சி உணவு வங்கியின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
இன்று (ஜனவரி 4) துபையின் ஆட்சியாளராக பதவியேற்ற 10வது ஆண்டின் துவக்கத்தை சிறப்பிக்கும் வகையில் 'உணவு வங்கி' (Food Bank) திட்டத்தை துவக்கி வைத்தார் ஷேக் முஹமது பின் ராஷித் அவர்கள், இதன் மூலம் வளைகுடா பகுதியில் உணவை வீணடிக்காத பிராந்தியமாக துபை உருவாக்கவுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
துபை அரசின் துணையுடன் செயல்படும் தர்ம அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்பட இருக்கும் இந்த உணவு வங்கி நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பண்ணைகள் என உணவுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தளங்களிலிருந்தும் மீதமாகும் கெடாத உணவுகள் திரட்டப்பட்டு, சுகாதாரமான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு தன்னார்வத் தொண்டர்கள், பங்களிப்பாளர்கள் உதவியுடன் அமீரகத்திற்குள்ளும், பிற நாடுகளிலும் தேவையுடையோருக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக சர்வதேச அளவில் செயல்படும் பல தொண்டு நிறுவனங்களுடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளப்படும்.
மேலும் தேதி காலாவதியான (Date Expired), கெட்டுப்போன உணவுகளை (Inedible) கூட வீணடிக்காமல் மறுசுழற்சி (Recycle) செய்து உரம், ரசாயனம், மருத்துவ ஆய்வு போன்ற பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் துபை மாநகரம் பூஜ்ய உணவு விரய மாநகராக (Zero Food Wastage City) உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆண்டொன்றுக்கு சுமார் 13 பில்லியன் திர்ஹம் மதிப்புள்ள உணவுகள் வீணடிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. துபை மாநகராட்சி உணவு வங்கியின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.