அதிரை நியூஸ்: ஜன-15
புகை மனிதனுக்கு, சுற்றுச்சூழலுக்கு பகை என தெரிந்தே செய்யப்படும் பெருங்குற்றம். இந்த புகைப்பழக்கத்தால் ஆண்டொன்றுக்கு சுமார் 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உலகப் பொருளாதாரம் பாழடிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனமும் (WHO) அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனமும் (U.S. National Cancer Institute) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
தற்போது ஆண்டுதோறும் புகைத்தல் மற்றும் புகையிலை பொருட்கள் பாவித்தலால் ஏற்படும் 6 மில்லியன் மரணங்கள் (இதுவும் ஒருவகை தற்கொலை தான்) 2030 ஆம் ஆண்டுவாக்கில் 8 மில்லியன் அளவு உயரும் என எச்சரிக்கை மணியடிக்கின்றது. இந்த மரணங்களில் சுமார் 80 சதவிகிதம் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் தான் அதிகம் நிகழுமாம்.
2014-2015 ஆம் வருடத்தில் மட்டும் சுமார் 260 பில்லியன் அளவுக்கு லாபத்தை ஈடடியுள்ளன புகையிலை பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆனால் புகையிலையின் தீங்குகள் குறித்து மக்களை எச்சரிப்பதற்காக உலக நாடுகள் சுமார் 1 பில்லியன் டாலர்களை மட்டுமே செலவிட்டுள்ளன.
புகையிலை பாவனையை மட்டுப்படுத்த கடுமையான வரிகள், விலை உயர்வு, புகைக்கு எதிரான விரிவான கொள்கைகளை அமல்படுத்துதல், புகையிலை தயாரிப்பு நிறுவனங்களின் விளம்பரங்களை முற்றாக தடை செய்தல், சிகரெட் பெட்டிகளில் படத்துடன் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்தல் என அனைத்து நாட்டு அரசுகளும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கோரியுள்ளது.
புகை வேண்டாம் சகோதரர்களே! இன்றோடு விட்டுத் தொலைத்துவிட்டு ஆரோக்கியமாக வாழ நமக்கு நாமே சபதம் ஏற்போம்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
புகை மனிதனுக்கு, சுற்றுச்சூழலுக்கு பகை என தெரிந்தே செய்யப்படும் பெருங்குற்றம். இந்த புகைப்பழக்கத்தால் ஆண்டொன்றுக்கு சுமார் 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உலகப் பொருளாதாரம் பாழடிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனமும் (WHO) அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனமும் (U.S. National Cancer Institute) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
தற்போது ஆண்டுதோறும் புகைத்தல் மற்றும் புகையிலை பொருட்கள் பாவித்தலால் ஏற்படும் 6 மில்லியன் மரணங்கள் (இதுவும் ஒருவகை தற்கொலை தான்) 2030 ஆம் ஆண்டுவாக்கில் 8 மில்லியன் அளவு உயரும் என எச்சரிக்கை மணியடிக்கின்றது. இந்த மரணங்களில் சுமார் 80 சதவிகிதம் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் தான் அதிகம் நிகழுமாம்.
2014-2015 ஆம் வருடத்தில் மட்டும் சுமார் 260 பில்லியன் அளவுக்கு லாபத்தை ஈடடியுள்ளன புகையிலை பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆனால் புகையிலையின் தீங்குகள் குறித்து மக்களை எச்சரிப்பதற்காக உலக நாடுகள் சுமார் 1 பில்லியன் டாலர்களை மட்டுமே செலவிட்டுள்ளன.
புகையிலை பாவனையை மட்டுப்படுத்த கடுமையான வரிகள், விலை உயர்வு, புகைக்கு எதிரான விரிவான கொள்கைகளை அமல்படுத்துதல், புகையிலை தயாரிப்பு நிறுவனங்களின் விளம்பரங்களை முற்றாக தடை செய்தல், சிகரெட் பெட்டிகளில் படத்துடன் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்தல் என அனைத்து நாட்டு அரசுகளும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கோரியுள்ளது.
புகை வேண்டாம் சகோதரர்களே! இன்றோடு விட்டுத் தொலைத்துவிட்டு ஆரோக்கியமாக வாழ நமக்கு நாமே சபதம் ஏற்போம்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.