அதிரை நியூஸ்: ஜன-17
பொறுப்பற்ற முறையிலும் மிக வேகமாகவும் வாகனம் ஓட்டிய அமீரக நபர் தன்னுடைய காரை விடுவித்து (impounded Car) எடுத்தச் செல்ல 1 லட்சம் திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிய நாட்டைச் சேர்ந்த பைக் ஓட்டுனர் ஒருவருக்கு நடைபாதையில் பைக்கை ஓட்டியதால் 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டு பைக் முடக்கப்பட்டுள்ளது என துபை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய போக்குவரத்து சட்டப்படி, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் சட்டவிரோத கார் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படியாக, 2016 ஆம் ஆண்டில் மொத்தம் 1226 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் 31 பேர் சட்ட விரோத பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள். மேலும், 325 கார்கள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து குற்றத்தில் ஈடுபட்டு போலீஸிடம் சிக்காமல் இருக்க தப்பித்து ஓடிய 24 பேரின் கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 281 ஸ்பாட் குற்றங்களும் 945 ஓட்டுனர் மீதான பொதுமக்களின் புகார்களும் பதியப்பட்டுள்ளன.
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததற்காக 119 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதில் 20 வாகனங்கள் சம்பவ இடத்திலேயே முடக்கப்பட்டது.
போலீஸாரிடம் முன்அனுமதி பெறாமல் சிறு விபத்துக்களை மறைத்து காருக்கு பெயிண்ட் அடித்த குற்றத்திற்காக 10 பேரும், 2 நம்பர் பிளேட்டுகளுக்கு பதிலாக ஒற்றை நம்பர் பிளேட்டுடன் வாகனம் ஓட்டிச் சென்றதற்காக 9 பேரும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பழுதான வாகனங்களை ஒட்டிச் சென்றதற்காக 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
பொறுப்பற்ற முறையிலும் மிக வேகமாகவும் வாகனம் ஓட்டிய அமீரக நபர் தன்னுடைய காரை விடுவித்து (impounded Car) எடுத்தச் செல்ல 1 லட்சம் திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிய நாட்டைச் சேர்ந்த பைக் ஓட்டுனர் ஒருவருக்கு நடைபாதையில் பைக்கை ஓட்டியதால் 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டு பைக் முடக்கப்பட்டுள்ளது என துபை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய போக்குவரத்து சட்டப்படி, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் சட்டவிரோத கார் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படியாக, 2016 ஆம் ஆண்டில் மொத்தம் 1226 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் 31 பேர் சட்ட விரோத பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள். மேலும், 325 கார்கள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து குற்றத்தில் ஈடுபட்டு போலீஸிடம் சிக்காமல் இருக்க தப்பித்து ஓடிய 24 பேரின் கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 281 ஸ்பாட் குற்றங்களும் 945 ஓட்டுனர் மீதான பொதுமக்களின் புகார்களும் பதியப்பட்டுள்ளன.
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததற்காக 119 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதில் 20 வாகனங்கள் சம்பவ இடத்திலேயே முடக்கப்பட்டது.
போலீஸாரிடம் முன்அனுமதி பெறாமல் சிறு விபத்துக்களை மறைத்து காருக்கு பெயிண்ட் அடித்த குற்றத்திற்காக 10 பேரும், 2 நம்பர் பிளேட்டுகளுக்கு பதிலாக ஒற்றை நம்பர் பிளேட்டுடன் வாகனம் ஓட்டிச் சென்றதற்காக 9 பேரும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பழுதான வாகனங்களை ஒட்டிச் சென்றதற்காக 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.