.

Pages

Tuesday, January 17, 2017

ஸ்காட்லாந்து சர்ச்சில் குர்ஆன் வசனம் ஓத அனுமதி !

அதிரை நியூஸ்: ஜன-17
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் அமைந்துள்ள செயின்ட் மேரீஸ் கேதட்ரல் எனும் சர்ச்சில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கிளாஸ்கோ நகர கம்யூனிட்டியை சேர்ந்த முஸ்லீம்கள் சிலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லீம்களிடம் சர்ச் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து அங்கு அல்குர்ஆனின் 19வது அத்தியாயமான சூரா மர்யத்தின் சில வசனங்கள் ஓதப்பட்டு பொருள் கூறப்பட்டது. இந்த அத்தியாயம் உலக முஃமீன்களின் தாய் என உலக முஸ்லீம்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள மர்யம் (அலை) மற்றும் நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு மற்றும் இறைவனுக்கு மகன் இல்லை என மறுத்தல் பற்றியதாகும்.

கிருஸ்துவம் மற்றும் இஸ்லாமிய சமூக மக்களின் புரிந்துணர்வு நடவடிக்கையாக சர்ச்சிற்குள் குர்ஆன் ஓத அனுமதிக்கப்பட்டதற்காக இந்நிகழ்ச்சியின் நிறைவுக்குப் பின், சர்ச் பொறுப்பாளர்கள் மற்றும் குருமார்களை கடுமையாக வசைபாடி சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர் சிலர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சர்ச் நிர்வாகம் சார்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.