.

Pages

Monday, January 2, 2017

26 ஊராட்சிகளில் நாளை ( ஜன.3 ) சிறப்பு கிராம சபைக் கூட்டம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் உள்ள 26 ஊராட்சிகளில் மட்டும் நாளை 03-01-2017 செவ்வாய்கிழமை அன்று 2014-15 மற்றும் 2015-2016 ம் ஆண்டிற்கான மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகளை மத்திய அரசின் அறிவிப்பின்படி சமு்க தணிக்கை மேற்கொள்ளல் குறித்து நடைபெற உள்ள சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் மணக்கரம்பை ஊராட்சியிலும். பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஓரத்தூர். சானூரப்பட்டி ஊராட்சிகளிலும். திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் அல்லூர். செம்மங்குடி ஊராட்சிகளிலும். ஓரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் கோவிலூர். ஆதனக்கோட்டை ஊராட்சிகளிலும். திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் கிளாமங்கலம். அதம்பை ஊராட்சிகளிலும். கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் குமரங்குடி. திப்பிராஜபுரம் ஊராட்சிகளிலும். திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் எஸ்,புதூர். வில்லியவரம்பல் ஊராட்சிகளிலும். திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் மரத்துறை. அணைக்கரை ஊராட்சிகளிலும். பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளிக்கடை. பசுபதிகோவில் ஊராட்சிகளிலும். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தேவராயன்பேட்டை. கீழகோவில்பத்து ஊராட்சிகளிலும். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் செம்பாளுர். நடுவிக்கோட்டை ஊராட்சிகளிலும். மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் சொக்கனாவூர். பழவோக்காடு  ஊராட்சிகளிலும். பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் மாவடுக்குறிச்சி. புனவாசல் ஊராட்சிகளிலும். சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் சொக்கநாதபுரம் ஊராட்சியிலும் மேற்காஹணும் 2014-15 மற்றும் 2015-2016 ம் ஆண்டிற்கான மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகளை மத்திய அரசின் அறிவிப்பின்படி சமு்க தணிக்கை மேற்கொள்ளல் பொருள் தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது,

மேற்காணும் 14 வட்டாரங்களில் 26 ஊராட்சிகளில் மட்டும் உள்ள பொது மக்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது ஒத்துழைப்பினை வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.