.

Pages

Tuesday, January 3, 2017

துபாயில் பிரமாண்ட பயணிகள் துறைமுகம், லைட் ஹவுஸ் !

அதிரை நியூஸ்: துபாய், ஜன-03
ஆடம்பரங்களுக்கு அடுத்து, நவீன துபைக்கு சுற்றுலா பயணிகளையும், வர்த்தகர்களை ஈர்க்கும் முக்கிய தூண்டில்களாக பிரம்மாண்ட கட்டுமானங்களே முக்கிய அங்கம் வகிக்கின்றன. அதனடிப்படையில் புதிய பயணிகள் துறைமுகம் மற்றும் லைட் ஹவுஸ் நிர்மாணிப்பிற்கான திட்டம் குறித்து துபை ஆட்சியாளர் ஷேக் முஹமது அவர்கள் முறைப்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

ஜூமைரா பீச் ரெஸிடன்ஸ் மற்றும் பாம் ஜூமைராவிற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் சுமார் 20 மில்லியன் சதுர அடியில் 'துபை துறைமுகம்;' கட்டப்படவுள்ளது. இந்தத் துறைமுகத்தில் ஒரே நேரத்தில் 1400 ஆடம்பர படகுகள் மற்றும் பயணியர் கப்பல்களை நிறுத்த முடியும் மேலும் ஒரே நேரத்தில் சுமார் 6000 பயணிகளின் வருகையை கையாள முடியும்.

மேலும், அதே இடத்தில் சுமார் 3.5 மில்லியன் சதுர அடியில் ஷாப்பிங் மால், கலையரங்கம் (Events Arena), குடியிருப்பு கட்டிடங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், அலுவலகங்கள், சில்லறை வணிக நிறுவனங்கள், அரசின் பொது சேவை மையங்கள், உணவகங்கள், தேநீரகம் இவற்றுடன் 135 அடி உயர பிரம்மாண்ட லைட் ஹவுஸ் ஒன்றும் புதிய துபை துறைமுகத்தை சூழ வரவுள்ளது.

துறைமுகத்திற்கான நிலப்பகுதி தோண்டுதல் பணி நிறைவடைந்த பின் 4 ஆண்டுகளில் இத்திட்டம் கட்டி முடிக்கப்படும். 3 ஹெலிகாப்டர் தளங்கள் (Helipads), புதிய துறைமுகத்தையும் ஷேக் ஜாயித் சாலையையும் இணைக்கும் நேரடி மேம்பாலம் ஒன்று, பாம் ஜூமைரா மற்றும் புளு வாட்டர் ஐலேண்ட் மெட்ரோ நிலையங்களை இணைக்கும் வகையில் மோனோ ரயில் திட்டம், துறைமுகத்தை பாம் ஜூமைராவுடன் இணைக்கும் நடைபாலம் ஒன்று என பல்வேறு சிறம்பம்சங்களுடன் உருவாகவுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.