அதிரை நியூஸ்: ஜன-16
ஷார்ஜாவில் 400 மில்லியன் திர்ஹம் செலவில், 17,000 சதுர அடி பரப்பளவில், தரை தளத்துடன் கூடிய இரண்டடுக்கு மாடிகளுடன் புதிய நவீன மத்திய சிறை மற்றும் கைதிகள் புனர்வாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த சிறைச்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன வசதிகளை பார்த்துவிட்டு சிறையை பற்றிய கூடுதல் தகவல்கள் பார்ப்போம்.
1. இந்த சிறையில் 8 அறைகள் டிவி வசதி, கண்காணிப்பு கேமராக்கள், சூரியக் குளியலுக்கான திறந்தவெளி அறை, டாக்டர் மற்றும் நார்சுகளுக்கான அறை, மருந்தகம், அறுவை சிகிச்சைக்கான அறை (Operation Theater) மற்றும் 15 எய்ட்ஸ் மற்றும் காசநோய் நோயாளிகளுக்கான சிகிச்சை அறை போன்றவைகளை உள்ளடக்கியது.
2. கைதிகளின் திறமைக்கேற்ப பயிற்சிக்கூடத்தில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கத்தேவையான நவீன கருவிகள் (Simulators) உள்ளன.
3. சுமார் 3 மில்லியன் செலவில் கைதிகள் 'ஆன்லைன்' வழியாக தங்களின் படிப்பைத் தொடர நவீன கருவிகளுடன் வகுப்பறை.
4. உணவகம், தொழுகைக் கூடம், நூலகம் மற்றும் தொழிற்பயிற்சி கூடம் போன்ற வசதிகள்.
5. விடுதலையாகும் கைதிகள் சமூகத்தில் மீண்டும் கவுரவத்துடன் வாழும் வகையில் தார்மீக, நிதி உதவிகள், (Moral & Financial Supports) கல்வி (Education), மார்க்க அறிவுரைகள் மற்றும் மனநல ஆலோசணைகள்.
மேற்காணும் வசதிகளுடன் கைதிகள் தங்களின் குடும்பத்தை சந்தித்து வர குறுகிய விடுப்புக்கள் (Conjugal Visits), நன்னடத்தையுள்ள கைதிகள் முன்கூட்டியே விடுதலை, வேலைலைவாய்ப்புக்கள் என புனர்வாழ்வு வசதிகளும் செய்து தரப்படவுள்ளன.
ஷார்ஜாவின் அல் ரம்தா பகுதியில் பழைய சிறைச்சாலை இருந்த அதே இடத்தில் புதிதாக இந்த சிறை கட்டப்பட்டுள்ளது. பழைய சிறையில் ஒரே நேரத்தில் 2,000 கைதிகளை மட்டுமே அடைக்க முடியும் ஆனால் புதிய சிறையில் 3,000 பேர் வரை அடைக்க முடியும். ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கு தனித்தனி சிறைக்கட்டிட தொகுதிகளுடன் கைதிகள் தற்கொலை மற்றும் காயப்படுத்திக் கொள்வதிலிருந்தும் காக்கும் வகையிலான சிறையமைப்பு. மேலும் சிறை வளாகம் முழுவதுமே கட்டுப்பாட்டு அறையிலிருந்து மட்டுமே திறக்க முடியும் என்ற ஒருமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு மற்றும் கேமரா கண்காணிப்பு என கட்டமைக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
ஷார்ஜாவில் 400 மில்லியன் திர்ஹம் செலவில், 17,000 சதுர அடி பரப்பளவில், தரை தளத்துடன் கூடிய இரண்டடுக்கு மாடிகளுடன் புதிய நவீன மத்திய சிறை மற்றும் கைதிகள் புனர்வாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த சிறைச்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன வசதிகளை பார்த்துவிட்டு சிறையை பற்றிய கூடுதல் தகவல்கள் பார்ப்போம்.
1. இந்த சிறையில் 8 அறைகள் டிவி வசதி, கண்காணிப்பு கேமராக்கள், சூரியக் குளியலுக்கான திறந்தவெளி அறை, டாக்டர் மற்றும் நார்சுகளுக்கான அறை, மருந்தகம், அறுவை சிகிச்சைக்கான அறை (Operation Theater) மற்றும் 15 எய்ட்ஸ் மற்றும் காசநோய் நோயாளிகளுக்கான சிகிச்சை அறை போன்றவைகளை உள்ளடக்கியது.
2. கைதிகளின் திறமைக்கேற்ப பயிற்சிக்கூடத்தில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கத்தேவையான நவீன கருவிகள் (Simulators) உள்ளன.
3. சுமார் 3 மில்லியன் செலவில் கைதிகள் 'ஆன்லைன்' வழியாக தங்களின் படிப்பைத் தொடர நவீன கருவிகளுடன் வகுப்பறை.
4. உணவகம், தொழுகைக் கூடம், நூலகம் மற்றும் தொழிற்பயிற்சி கூடம் போன்ற வசதிகள்.
5. விடுதலையாகும் கைதிகள் சமூகத்தில் மீண்டும் கவுரவத்துடன் வாழும் வகையில் தார்மீக, நிதி உதவிகள், (Moral & Financial Supports) கல்வி (Education), மார்க்க அறிவுரைகள் மற்றும் மனநல ஆலோசணைகள்.
மேற்காணும் வசதிகளுடன் கைதிகள் தங்களின் குடும்பத்தை சந்தித்து வர குறுகிய விடுப்புக்கள் (Conjugal Visits), நன்னடத்தையுள்ள கைதிகள் முன்கூட்டியே விடுதலை, வேலைலைவாய்ப்புக்கள் என புனர்வாழ்வு வசதிகளும் செய்து தரப்படவுள்ளன.
ஷார்ஜாவின் அல் ரம்தா பகுதியில் பழைய சிறைச்சாலை இருந்த அதே இடத்தில் புதிதாக இந்த சிறை கட்டப்பட்டுள்ளது. பழைய சிறையில் ஒரே நேரத்தில் 2,000 கைதிகளை மட்டுமே அடைக்க முடியும் ஆனால் புதிய சிறையில் 3,000 பேர் வரை அடைக்க முடியும். ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கு தனித்தனி சிறைக்கட்டிட தொகுதிகளுடன் கைதிகள் தற்கொலை மற்றும் காயப்படுத்திக் கொள்வதிலிருந்தும் காக்கும் வகையிலான சிறையமைப்பு. மேலும் சிறை வளாகம் முழுவதுமே கட்டுப்பாட்டு அறையிலிருந்து மட்டுமே திறக்க முடியும் என்ற ஒருமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு மற்றும் கேமரா கண்காணிப்பு என கட்டமைக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.