அதிரை நியூஸ்: ஜன-16
துபையில் தொழிலாளர்களின் முகாம்கள் நிறைந்த பகுதியான முஹைஸ்னாவில் கைவிடப்பட்ட 10 சாக்கடைக்குழிகளை (Manhole) விற்பனைக்காக சாமான்களை பதுக்கும் இடங்களாக மாற்றி வைத்திருந்தனர் சில ஆசிய நாடுகளைச் சேர்ந்தோர்.
மாநகராட்சியின் உதவியுடன் துபை சுற்றுச்சூழல் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குடோன் சாக்கடை குழிகளிலிருந்து விற்பனைக்குத் தயாராக கம்பளி போர்வைகள், சமையலறை சாதனங்கள், கார்பெட்டுகள், தொழிற்கருவிகள் போன்றவை சுமார் 30 டன் கைப்பற்றப்பட்டு உடனடியாக அழித்தொழிக்கப்பட்டன.
இதேபோல் பிற எமிரேட்டுகளில் விற்பனைக்கு உகந்தவையல்ல எனக் கழிக்கப்படும் காய்கறிகள், மாமிசங்கள், மீன்கள் போன்றவற்றை ஏற்றிவந்த சுமார் 45 பிக்அப் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு 3 மாதங்களுக்கு முடக்கப்பட்டதுடன் அதன் ஓட்டுனர்களுக்கும் கடுமையாக அபராதங்கள் விதிக்கப்பட்டு, இனி இதுபோன்ற செயல்களை தொடர மாட்டேன் என்றும் எழுத்துபூர்வமாக எழுதி வாங்கப்பட்டுள்ளது மேலும் அத்தகைய வாகனங்கள் ஒரேயடியாக கைப்பற்றப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Source: Gulf news
துபையில் தொழிலாளர்களின் முகாம்கள் நிறைந்த பகுதியான முஹைஸ்னாவில் கைவிடப்பட்ட 10 சாக்கடைக்குழிகளை (Manhole) விற்பனைக்காக சாமான்களை பதுக்கும் இடங்களாக மாற்றி வைத்திருந்தனர் சில ஆசிய நாடுகளைச் சேர்ந்தோர்.
மாநகராட்சியின் உதவியுடன் துபை சுற்றுச்சூழல் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குடோன் சாக்கடை குழிகளிலிருந்து விற்பனைக்குத் தயாராக கம்பளி போர்வைகள், சமையலறை சாதனங்கள், கார்பெட்டுகள், தொழிற்கருவிகள் போன்றவை சுமார் 30 டன் கைப்பற்றப்பட்டு உடனடியாக அழித்தொழிக்கப்பட்டன.
இதேபோல் பிற எமிரேட்டுகளில் விற்பனைக்கு உகந்தவையல்ல எனக் கழிக்கப்படும் காய்கறிகள், மாமிசங்கள், மீன்கள் போன்றவற்றை ஏற்றிவந்த சுமார் 45 பிக்அப் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு 3 மாதங்களுக்கு முடக்கப்பட்டதுடன் அதன் ஓட்டுனர்களுக்கும் கடுமையாக அபராதங்கள் விதிக்கப்பட்டு, இனி இதுபோன்ற செயல்களை தொடர மாட்டேன் என்றும் எழுத்துபூர்வமாக எழுதி வாங்கப்பட்டுள்ளது மேலும் அத்தகைய வாகனங்கள் ஒரேயடியாக கைப்பற்றப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Source: Gulf news
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.