அதிரை நியூஸ்: ஜன-12
சுமார் 2 நாட்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் அமீரகத்தை சூழ்ந்த பனிமூட்டத்தால் துபை மற்றும் அபுதாபியில் விமான போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பல விமானங்களின் வருகையும் புறப்படும் நேர மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளதால் பயணிகள் விமான நிலையம் புறப்படும் முன் மீண்டும் ஒருமுறை விமான புறப்பாடு குறித்த நிலையை (Flight Status) உறுதி செய்து கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலையிலிருந்து நிலவும் விமான தாமதங்களால் இன்று முழுவதுமே அதன் தாக்கம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை 10 மணி நிலவரப்படி, துபை மற்றும் அபுதாபியில் சுமார் 158 விமானங்களின் வருகை, புறப்பாடுகள் பாதிக்கப்பட்டதுடன் பல சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட எமிரேட்ஸ் மற்றும் பிளைதுபை விமான சேவைகளுக்கு பதிலாக மாற்று முன்பதிவு டிக்கெட்டை தங்களின் டிராவல் ஏஜென்ட்களோ அல்லது வாடிக்கையாளர் மையத்தை (Customer Care) அணுகியோ கூடுதல் கட்டணம் மற்றும் அபராதங்கள் ஏதுமின்றி மறுபதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை (re-booked tickets) பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
சுமார் 2 நாட்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் அமீரகத்தை சூழ்ந்த பனிமூட்டத்தால் துபை மற்றும் அபுதாபியில் விமான போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பல விமானங்களின் வருகையும் புறப்படும் நேர மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளதால் பயணிகள் விமான நிலையம் புறப்படும் முன் மீண்டும் ஒருமுறை விமான புறப்பாடு குறித்த நிலையை (Flight Status) உறுதி செய்து கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலையிலிருந்து நிலவும் விமான தாமதங்களால் இன்று முழுவதுமே அதன் தாக்கம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை 10 மணி நிலவரப்படி, துபை மற்றும் அபுதாபியில் சுமார் 158 விமானங்களின் வருகை, புறப்பாடுகள் பாதிக்கப்பட்டதுடன் பல சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட எமிரேட்ஸ் மற்றும் பிளைதுபை விமான சேவைகளுக்கு பதிலாக மாற்று முன்பதிவு டிக்கெட்டை தங்களின் டிராவல் ஏஜென்ட்களோ அல்லது வாடிக்கையாளர் மையத்தை (Customer Care) அணுகியோ கூடுதல் கட்டணம் மற்றும் அபராதங்கள் ஏதுமின்றி மறுபதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை (re-booked tickets) பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.