தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நெய்வாசல் ஊராட்சியில் சுற்றுலாத் துறையின் சார்பாக பொங்கல் விழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இன்று (16.01.2017) மாலை அணிவித்து வரவேற்றார்கள்.
வெளி நாட்டு சுற்றுலா பயணிகளுடன் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் பொங்கல் வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல் வழங்கினார்கள்.
பின்னர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பாரம்பரிய விளையாட்டான கபாடி போட்டி, உறியடி போட்டியை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்கள். மேலும், நெய்வாசல் ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் நடன நிகழ்ச்சிகள், இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சியும், தமிழ்நாட்டு கலைஞர்களின் கோலாட்டமும், தப்பாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம் சார்ந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றதை வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்கள்.
அதனை தொடர்ந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, போலந்து, ஹலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், அர்ஜன்டினா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து 60 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பொது மக்கள் மற்றும் அலுவலர்களுடன் நெய்வாசல் ஊராட்சியில் சுற்றுலா பயணிகளை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குநர் மந்திராசலம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரை. திருஞானம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சூரியநாராயணன், சுற்றுலா அலுவலர் ராஜசேகரன், தென்னக பண்பாட்டு நண்பர் குழு உறுப்பினர் முத்துக்குமார், ஏராளமான பொது மக்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
வெளி நாட்டு சுற்றுலா பயணிகளுடன் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் பொங்கல் வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல் வழங்கினார்கள்.
பின்னர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பாரம்பரிய விளையாட்டான கபாடி போட்டி, உறியடி போட்டியை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்கள். மேலும், நெய்வாசல் ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் நடன நிகழ்ச்சிகள், இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சியும், தமிழ்நாட்டு கலைஞர்களின் கோலாட்டமும், தப்பாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம் சார்ந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றதை வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்கள்.
அதனை தொடர்ந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, போலந்து, ஹலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், அர்ஜன்டினா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து 60 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பொது மக்கள் மற்றும் அலுவலர்களுடன் நெய்வாசல் ஊராட்சியில் சுற்றுலா பயணிகளை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குநர் மந்திராசலம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரை. திருஞானம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சூரியநாராயணன், சுற்றுலா அலுவலர் ராஜசேகரன், தென்னக பண்பாட்டு நண்பர் குழு உறுப்பினர் முத்துக்குமார், ஏராளமான பொது மக்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.