.

Pages

Wednesday, January 18, 2017

துபாயில் வேலைதேடுவோருக்கு இலவசமாக உணவளிக்கும் உணவகம் !

அதிரை நியூஸ்: ஜன-18
துபையில் கராமாவிலும், அல் பர்ஸாவிலும் செயல்படும் உணவகங்கள் நோம் நோம் ஆசியா ரெஸ்டாரண்ட் (Nom Nom Asia Restaurant). இங்குள்ள ஓர் அறிவிப்பு பலகை கண்டிப்பாக உங்களை இதன் உரிமையாளர்களான விவேக் பழனி (Vivek Balaney) மற்றும் சஞ்சய் மோகன் (sanjay Mohan) ஆகியோரை மனதார வாழ்த்தவே செய்யும்.

துபையில் வேலை தேடும் எவரும் தங்களிடம் பணமில்லாவிட்டாலும் இந்த உணவகத்தில் விரும்பிய மதிய உணவை ( Free Lunch ) கேட்டு வாங்கி சாப்பிடலாம், உங்களுக்கு இலவசமாக உணவை ஏற்பதில் மன சங்கடம் உள்ளதா? உங்களுக்கு வேலை கிடைத்து சம்பளம் கிடைத்தவுடன் கொடுத்து விடுங்கள் என அனுமதியளித்துள்ளனர்.

அமீரக அரசு 2017 ஆம் ஆண்டை 'கொடுத்து மகிழும் ஆண்டு' (Year of Giving) என அறிவிப்பதற்கு முன்பாகவே கடந்த ஒரு வருடமாகவே அல் பர்ஸா (Al Barsha) கிளையும், கடந்த ஜூன் மாதம் முதல் கராமா (Karama) கிளையும் பசிப்பிணியாற்றி வருகின்றன.

பொதுவாக மாற்றுத் திறனாளிகள் மீது மக்கள் அதிக இரக்கம் கொள்வது இயல்பு ஆனால் பசியுடன் வேலை தேடிவரும் ஒருவருக்கு இத்தகைய இயல்பான உதவிகள் கிடைக்காது. எனவே தான் இந்த இலவச உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினோம் என்றும் வேலை கிடைத்தப்பின் பலர் உணவுக்கான கட்டணத்தை திருப்பி செலுத்துவதுடன் வேலை கிடைத்த சந்தோஷத்தை நன்றியுடன் தங்களிடம் உளப்பூர்வமாக பகிர்ந்து கொள்வது, பலர் வாழ்த்துவதும் மனநிறைவு தருவாதாக கூறுகின்றனர் இதன் உரிமையாளர்கள். மேலும், தங்களால் இயன்றவரை இத்திட்டத்தை தொடரவும் உறுதிபூண்டுள்ளனர்.

விவேக் பழனி அவர்களையும் சஞ்சய் மோகன் அவர்களையும் நாங்களும் மனதார வாழ்த்துகிறோம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 

1 comment:

  1. வாழ்க வளர்க!!!!இறைவனின் அருள் குன்றாது பொழியட்டும்...அன்புடன் காயல் ஜெஸ்முதீன் Dca

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.