அதிரை நியூஸ்: ஜன-01
சவுதி மற்றும் அமீரகத்தில் மிகப்பெரும் தொழிலதிபராக கொடிகட்டிப் பறக்கும் மலையாள வம்சாவழி பிரமுகர் ஷேக் ரபீக் முஹமது என்பவர் மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கஸ்தான் (Kyrgystan) என்ற முன்னாள் சோவியத் ஒன்றிய நாட்டின் ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கிர்கிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அலி மிர்ஸா அவர்கள் வெளியிட்டுள்ளார்.
கேரள மாநிலம் கள்ளிக்கோட்டைச் (Calicut) சேர்ந்த 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஷேக் ரபீக் முஹமது மும்பையில் வளர்ந்தவர் பின்பு தனது திறமையால் முன்னேறி பல ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் பிரம்மாண்ட பாலங்கள் (Bridges), துறைமுகங்கள் Sea ports), சர்வதேச நாடுகளுக்கிடையே பெட்ரோலிய தயாரிப்புக்களை கொண்டு செல்வதற்கான பைப் லைன்கள் (Petrol & Gas pipelines between international countries), அனல் (Thermal) மற்றும் அணுமின் உற்பத்தி நிலையங்கள் (Nuclear Power Plants), அணைக்கட்டுக்கள் (Dams), பிரம்மாண்ட கட்டிடங்கள் (High Structural Buildings), விமான நிலையங்கள் (Airports), நெடுஞ்சாலைகள் (Highways), உரத் தொழிற்சாலைகள் (Chemical Fertilizer Factories) என அரசாங்கங்கள் சார்ந்த கட்டுமானங்களை கட்டித் தருவதில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளார். இவரது கம்மோன் குழும நிறுவனங்களில் (Gammon Group of Companies) சுமார் 2 லட்சம் பேர் 28 நாடுகளில் பணியாற்றுகின்றனர்.
சவுதி மற்றும் அமீரகத்தை தனது தொழில்களின் பாசறைiயாக கொண்டுள்ள ஷேக் ரபீக் முஹமது தனது இளம்வயதில் ஈரான் நாட்டிற்காக இரும்பு ஆலை ஒன்றை வெற்றிகரமாக கட்டித்தந்தார் அப்போது அவருடன் தற்செயலாக பழகி நண்பரானவர் கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 'குர்மன்பெக் சாலியேவிச் பாகியேவ்'. (Kurmanbek Saliyevich Bakiyev)
குர்மான்பெக் பின்னாளில் அரசியலில் ஈடுபட்டு கவர்னராக இருந்தபொழுது அவரது வேண்டுகோளை ஏற்று கிர்கஸ்தானிலும் அதேபோன்றதொரு இரும்பு ஆலையை உருவாக்கித் தந்தார். தொடர்ந்து நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு கிர்கிஸ்தான் ஜனாதிபதியாக 2 முறை பதவி வகித்த போது குர்மானபெக்; ஷேக் ரபீக் முஹமது அவர்களை ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகராக (Cheif Advisor) நியமித்துக் கொண்டார்.
ஷேக் ரபீக் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்தபோது சர்வதேச அளவில் பல வர்த்தக நண்பர்கள் கிடைத்ததுடன் கிர்கிஸ்தான் நாட்டில் பல்வேறு அந்நிய முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடு செய்வதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தார். நன்றியின் விளைவு, குர்மான்பெக் வேண்டுகோளை ஏற்று கிர்கிஸ்தான் குடிமகனாக தன்னை மாற்றிக் கொண்டார்.
பின்பு, சவுதி அரேபியாவின் வேண்டுகோளை ஏற்று துபையில் செயல்படும் வரியில்லா வர்த்தக மண்டலம் (Dubai model Freezone) போன்றதொரு திட்டத்தை சவுதியிலும் நிறுவிட கேட்டுக் கொள்ளப்பட்டார். இவர் வழியாக கிர்கிஸ்தான் நாடும் வளைகுடா நாடுகளின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக திகழ்வதுடன் ஜித்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பிலும் (Organisation of Islamic Countries - OIC) ஒரு உறுப்பினராக உள்ளது.
கேரளாவில் பிறந்து மும்பையில் வளர்ந்து சவுதியில் தொழிலதிபராக கால்பதித்து பின்பு அமீரகம், ஈரான், ஆப்பிரிக்க நாடுகள் என தொழில் வளர்த்து, கிர்கிஸ்தான் ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகராகவும் குடிமகனாகவும் மாறி, தற்போது துபையில் குடும்பத்துடன் வசிக்கும் ஷேக் ரபீக் முஹமதுக்கு நன்றி செலுத்தும் விதமாக அந்நிய நாட்டில் பிறந்த ஒருவருக்கு 'ராணுவ தளபதி' என்ற உயரிய பொறுப்பை வழங்கி அழகுபார்த்துள்ளது கிர்கிஸ்தான் நாடு.
பன்முகத் திறமைமிக்க இந்தியன் ஒருவனை இந்தியா பயன்படுத்த தவறியிருந்தாலும் நம் சமகால வம்சாவழி இந்தியன் ஒருவன் மிக உயர்ந்த பொறுப்புக்கு அந்நிய நாட்டில் தேர்ந்தெடுக்கப்படுவது இந்தியர்கள் என்ற அடிப்படையில் நமக்கெல்லாம் பெருமை தானே! மலையாளிகள் என்ற அடிப்படையில் நம் அண்டை மாநில கேரள சகோதரர்கள் காலரை உயர்த்திக் கொள்வது வேறு விஷயம்.
சத்தமின்றி ஒரு சாதனை செய்தவர் ஷேக் ரபீக் முஹமது மட்டுமல்ல, அவருடைய திறமையை கண்டறிந்து தனது நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொண்ட குர்மான்பெக் அவர்களும் ஒரு சாதனையாளர் தான்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
சவுதி மற்றும் அமீரகத்தில் மிகப்பெரும் தொழிலதிபராக கொடிகட்டிப் பறக்கும் மலையாள வம்சாவழி பிரமுகர் ஷேக் ரபீக் முஹமது என்பவர் மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கஸ்தான் (Kyrgystan) என்ற முன்னாள் சோவியத் ஒன்றிய நாட்டின் ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கிர்கிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அலி மிர்ஸா அவர்கள் வெளியிட்டுள்ளார்.
கேரள மாநிலம் கள்ளிக்கோட்டைச் (Calicut) சேர்ந்த 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஷேக் ரபீக் முஹமது மும்பையில் வளர்ந்தவர் பின்பு தனது திறமையால் முன்னேறி பல ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் பிரம்மாண்ட பாலங்கள் (Bridges), துறைமுகங்கள் Sea ports), சர்வதேச நாடுகளுக்கிடையே பெட்ரோலிய தயாரிப்புக்களை கொண்டு செல்வதற்கான பைப் லைன்கள் (Petrol & Gas pipelines between international countries), அனல் (Thermal) மற்றும் அணுமின் உற்பத்தி நிலையங்கள் (Nuclear Power Plants), அணைக்கட்டுக்கள் (Dams), பிரம்மாண்ட கட்டிடங்கள் (High Structural Buildings), விமான நிலையங்கள் (Airports), நெடுஞ்சாலைகள் (Highways), உரத் தொழிற்சாலைகள் (Chemical Fertilizer Factories) என அரசாங்கங்கள் சார்ந்த கட்டுமானங்களை கட்டித் தருவதில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளார். இவரது கம்மோன் குழும நிறுவனங்களில் (Gammon Group of Companies) சுமார் 2 லட்சம் பேர் 28 நாடுகளில் பணியாற்றுகின்றனர்.
சவுதி மற்றும் அமீரகத்தை தனது தொழில்களின் பாசறைiயாக கொண்டுள்ள ஷேக் ரபீக் முஹமது தனது இளம்வயதில் ஈரான் நாட்டிற்காக இரும்பு ஆலை ஒன்றை வெற்றிகரமாக கட்டித்தந்தார் அப்போது அவருடன் தற்செயலாக பழகி நண்பரானவர் கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 'குர்மன்பெக் சாலியேவிச் பாகியேவ்'. (Kurmanbek Saliyevich Bakiyev)
குர்மான்பெக் பின்னாளில் அரசியலில் ஈடுபட்டு கவர்னராக இருந்தபொழுது அவரது வேண்டுகோளை ஏற்று கிர்கஸ்தானிலும் அதேபோன்றதொரு இரும்பு ஆலையை உருவாக்கித் தந்தார். தொடர்ந்து நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு கிர்கிஸ்தான் ஜனாதிபதியாக 2 முறை பதவி வகித்த போது குர்மானபெக்; ஷேக் ரபீக் முஹமது அவர்களை ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகராக (Cheif Advisor) நியமித்துக் கொண்டார்.
ஷேக் ரபீக் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்தபோது சர்வதேச அளவில் பல வர்த்தக நண்பர்கள் கிடைத்ததுடன் கிர்கிஸ்தான் நாட்டில் பல்வேறு அந்நிய முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடு செய்வதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தார். நன்றியின் விளைவு, குர்மான்பெக் வேண்டுகோளை ஏற்று கிர்கிஸ்தான் குடிமகனாக தன்னை மாற்றிக் கொண்டார்.
பின்பு, சவுதி அரேபியாவின் வேண்டுகோளை ஏற்று துபையில் செயல்படும் வரியில்லா வர்த்தக மண்டலம் (Dubai model Freezone) போன்றதொரு திட்டத்தை சவுதியிலும் நிறுவிட கேட்டுக் கொள்ளப்பட்டார். இவர் வழியாக கிர்கிஸ்தான் நாடும் வளைகுடா நாடுகளின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக திகழ்வதுடன் ஜித்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பிலும் (Organisation of Islamic Countries - OIC) ஒரு உறுப்பினராக உள்ளது.
கேரளாவில் பிறந்து மும்பையில் வளர்ந்து சவுதியில் தொழிலதிபராக கால்பதித்து பின்பு அமீரகம், ஈரான், ஆப்பிரிக்க நாடுகள் என தொழில் வளர்த்து, கிர்கிஸ்தான் ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகராகவும் குடிமகனாகவும் மாறி, தற்போது துபையில் குடும்பத்துடன் வசிக்கும் ஷேக் ரபீக் முஹமதுக்கு நன்றி செலுத்தும் விதமாக அந்நிய நாட்டில் பிறந்த ஒருவருக்கு 'ராணுவ தளபதி' என்ற உயரிய பொறுப்பை வழங்கி அழகுபார்த்துள்ளது கிர்கிஸ்தான் நாடு.
பன்முகத் திறமைமிக்க இந்தியன் ஒருவனை இந்தியா பயன்படுத்த தவறியிருந்தாலும் நம் சமகால வம்சாவழி இந்தியன் ஒருவன் மிக உயர்ந்த பொறுப்புக்கு அந்நிய நாட்டில் தேர்ந்தெடுக்கப்படுவது இந்தியர்கள் என்ற அடிப்படையில் நமக்கெல்லாம் பெருமை தானே! மலையாளிகள் என்ற அடிப்படையில் நம் அண்டை மாநில கேரள சகோதரர்கள் காலரை உயர்த்திக் கொள்வது வேறு விஷயம்.
சத்தமின்றி ஒரு சாதனை செய்தவர் ஷேக் ரபீக் முஹமது மட்டுமல்ல, அவருடைய திறமையை கண்டறிந்து தனது நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொண்ட குர்மான்பெக் அவர்களும் ஒரு சாதனையாளர் தான்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.