.

Pages

Sunday, January 1, 2017

சவூதியில் ஓநாய் தாக்கி 3 வயது சிறுவன் காயம் !

அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, ஜன-01
ஈராக் நாட்டு எல்லையருகே அமைந்துள்ள சவுதி அரேபியா நகரம் அர்அர் (Arar). இங்குள்ள மால் ஒன்றில் மக்களை ஈர்ப்பதற்காக கூண்டில் வைக்கப்பட்டிருந்த ஓநாய் ஒன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 3 வயது சிறுவனின் கையை கடித்தது.

சம்பவத்தை தொடர்ந்து கடிபட்ட சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது என்றாலும் காட்டு மிருகங்களை காட்சிப் பொருளாக வைத்திருப்பது குறித்து கடும் கண்டனங்களும் தவறுசெய்தோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சவுதியில் கடந்த 2 மாதங்களில் காட்டு மிருகங்களால் தாக்கப்படும் 2வது சம்பவம் இது. சவுதியின் சகாகா என்ற ஊரில் இதேபோன்று மாலில் வைக்கப்பட்டிருந்த புலி ஒன்று சிறுமியை தாக்கியது பலரது கண்டனத்தையும் பெற்றிருந்தது.

அதிரை நியூஸில் வெளியிடப்பட்ட அந்த செய்தியை வாசிக்க:

சவுதியில் புலி தாக்கி சிறுமி காயம் !

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.