.

Pages

Monday, January 2, 2017

புஜைராவில் மலையேற்ற வீரர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு !

அதிரை நியூஸ்: புஜைரா, ஜன-02
நேற்று (ஞாயிறு) மாலை 3.30 மணியளவில் அமீரகத்தை சேர்ந்த சுமார் 30 வயதுடைய மலையேற்ற வீரர் ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவலை அடுத்து தேடத்துவங்கிய புஜைரா போலீஸார் மலையுச்சிக்கு ஏறமுடியாத நிலையில் சிக்கிக் கொண்டிருந்தவரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 'அமீரக  தேசிய தேடுதல் மற்றும் மீட்பு மையம்' 5 ஆலோசனைகள் வழங்கியுள்ளது.

1. முதலில் பாறைகளில் ஏறுவதற்கான அடிப்படை பயிற்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள், உள்விளையாட்டு அரங்கங்களிலுள்ள சுவர்களில் ஏறிப் பழகுங்கள்.

2. மலையேறுமுன் சம்மந்தபட்ட துறைக்கு உங்களுடைய திட்டம், குழுவினர் மற்றும் இடம் குறித்த விபரங்கள் என அனைத்தையும் தெரிவியுங்கள்.

3. சமூக வலைத்தளங்களின் வாயிலாக புதிய தகவல்களையும், மலையேற்றத்திற்கு தகுதியான மலைப்பகுதிகள் குறித்த உள்ளூர் தகவல்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

4. பிறருடன் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக ஒரு மொபைல் போன் அல்லது சேட்டிலைட் போன் அல்லது குறைந்தபட்சம் ஒரு விசிலையாவது வைத்துக் கொள்ளுங்கள்.

5. எப்போதும் நீங்கள் மலையேறும் பகுதியின் தன்மை குறித்தோ, வானிலை குறித்தோ குறைத்து மதிப்பிட வேண்டாம். மலைப்பகுதியில் திடீரென பெய்யும் மழையால் ஏற்படும் வெள்ளத்தில் நீங்கள் சிக்க நேரிடலாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
* File Image

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.