தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் 10.08.2018 மற்றும் 17.08.2018 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :-
நாடு தழுவிய குடற்புழு நீக்க நாள் முகாம் ஒரு வயது குழந்தை முதல் 19-வயது வரை உள்ள அனைவருக்கும் 10.08.2018 அன்றும், விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 17.08.2018 அன்றும், அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகின்றது.
இம்முகாமில் 1-2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 மில்;லி கிராம் (மாத்திரை) அல்லது 5 மில்லி அல்பெண்டசோல் திரவமும், 2-19 வயதிற்குட்பட்ட குழந்தைகளு¡கு 400 மில்லி கிராம் அளவுள்ள ஒரு மாத்திரை அல்பெண்டசோல் வழங்கப்படவுள்ளது.
இம்முகாமில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3,19,024 குழந்தைகளுக்கும், தனியார் பள்ளிகளில் பயிலும் 20,434 குழந்தைகளுக்கும், அங்கன்வாடி மையங்களில் பயிலும் 1,09,548 குழந்தைகளுக்கும், 40538 பள்ளி செல்லா குழந்தைகளுக்கும் ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் சுமார் 6,51,827 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.
இம்மாத்திரைகள் மூலம் குடற்புழு நீக்கப்பட்டு இரத்தசோகை ஏற்படுவதை தடுத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுதல் போன்ற நன்மைகள் ஏற்படும். எனவே, தேசிய குடற்புழு நீக்க நாளில் அனைத்து குழந்தைகளும் பங்கு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :-
நாடு தழுவிய குடற்புழு நீக்க நாள் முகாம் ஒரு வயது குழந்தை முதல் 19-வயது வரை உள்ள அனைவருக்கும் 10.08.2018 அன்றும், விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 17.08.2018 அன்றும், அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகின்றது.
இம்முகாமில் 1-2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 மில்;லி கிராம் (மாத்திரை) அல்லது 5 மில்லி அல்பெண்டசோல் திரவமும், 2-19 வயதிற்குட்பட்ட குழந்தைகளு¡கு 400 மில்லி கிராம் அளவுள்ள ஒரு மாத்திரை அல்பெண்டசோல் வழங்கப்படவுள்ளது.
இம்முகாமில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3,19,024 குழந்தைகளுக்கும், தனியார் பள்ளிகளில் பயிலும் 20,434 குழந்தைகளுக்கும், அங்கன்வாடி மையங்களில் பயிலும் 1,09,548 குழந்தைகளுக்கும், 40538 பள்ளி செல்லா குழந்தைகளுக்கும் ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் சுமார் 6,51,827 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.
இம்மாத்திரைகள் மூலம் குடற்புழு நீக்கப்பட்டு இரத்தசோகை ஏற்படுவதை தடுத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுதல் போன்ற நன்மைகள் ஏற்படும். எனவே, தேசிய குடற்புழு நீக்க நாளில் அனைத்து குழந்தைகளும் பங்கு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.