தஞ்சை மாவட்டத்தில் தூய்மை தர மதிப்பீடு கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
ஆட்சியரகத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மை இந்தியா இயக்கம், தூய்மை கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட அளவிலான முன்னோடி விளக்கக் கூட்டத்தில் அவர் பேசியது:
மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்குத் தூய்மை குறித்த தர மதிப்பீட்டுக்கான கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. தர மதிப்பீடு சதவீத அடிப்படையில் பிரிக்கப்படவுள்ளது. பொது இடங்களில் சுகாதார வசதிகள் அளவீட்டுக்கு 30 சதவீதமும், பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்ட சுகாதார விழிப்புணர்வு குறித்த அளவீட்டுக்கு 35 சதவீதமும், குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக இணையதள பதிவுகளின்படி கிராமங்களில் ஏற்படுத்தப்பட்ட சுகாதார அளவீட்டுக்கு 35 சதவீதமும் என பிரிக்கப்பட்டு, கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
ஊராட்சியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சந்தைகள், முக்கிய வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவை சுகாதார கணக்கெடுப்பில் முக்கிய அம்சங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து துறைப் பொறுப்பு அலுவலர்களும், அவரவர் துறையைச் சார்ந்த பொது இடங்களில் செய்யப்பட்டுள்ள சுகாதார வசதிகள் மற்றும் அதன் பயன்பாடுகள், திடக்கழிவு மேலாண்மை செயலாக்கம், திரவக்கழிவு மேலாண்மை செயலாக்கம், நீர் தேங்கும் இடங்கள் குறித்த ஆய்வு, ஊரகப் பகுதி வாழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள சுகாதார விழிப்புணர்வு குறித்த ஆய்வு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் நபர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சுகாதாரச் செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் மூலம் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள இணையதள செயலி மூலம் பொதுமக்கள் தங்களது கருத்துகளைப் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்த வேண்டும். மாவட்டத்துக்கு உயர்ந்த சுகாதார தர மதிப்பீடு அளிக்கும் வகையில் அனைத்து துறைகளும் செயல்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி. மந்திராசலம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரத் திட்ட அலுவலர் இந்துபாலா, ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆட்சியரகத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மை இந்தியா இயக்கம், தூய்மை கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட அளவிலான முன்னோடி விளக்கக் கூட்டத்தில் அவர் பேசியது:
மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்குத் தூய்மை குறித்த தர மதிப்பீட்டுக்கான கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. தர மதிப்பீடு சதவீத அடிப்படையில் பிரிக்கப்படவுள்ளது. பொது இடங்களில் சுகாதார வசதிகள் அளவீட்டுக்கு 30 சதவீதமும், பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்ட சுகாதார விழிப்புணர்வு குறித்த அளவீட்டுக்கு 35 சதவீதமும், குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக இணையதள பதிவுகளின்படி கிராமங்களில் ஏற்படுத்தப்பட்ட சுகாதார அளவீட்டுக்கு 35 சதவீதமும் என பிரிக்கப்பட்டு, கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
ஊராட்சியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சந்தைகள், முக்கிய வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவை சுகாதார கணக்கெடுப்பில் முக்கிய அம்சங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து துறைப் பொறுப்பு அலுவலர்களும், அவரவர் துறையைச் சார்ந்த பொது இடங்களில் செய்யப்பட்டுள்ள சுகாதார வசதிகள் மற்றும் அதன் பயன்பாடுகள், திடக்கழிவு மேலாண்மை செயலாக்கம், திரவக்கழிவு மேலாண்மை செயலாக்கம், நீர் தேங்கும் இடங்கள் குறித்த ஆய்வு, ஊரகப் பகுதி வாழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள சுகாதார விழிப்புணர்வு குறித்த ஆய்வு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் நபர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சுகாதாரச் செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் மூலம் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள இணையதள செயலி மூலம் பொதுமக்கள் தங்களது கருத்துகளைப் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்த வேண்டும். மாவட்டத்துக்கு உயர்ந்த சுகாதார தர மதிப்பீடு அளிக்கும் வகையில் அனைத்து துறைகளும் செயல்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி. மந்திராசலம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரத் திட்ட அலுவலர் இந்துபாலா, ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.