.

Pages

Friday, August 10, 2018

அதிரையில் குடிசை வீடு எரிந்து நாசம்: எம்எல்ஏ சி.வி சேகர் நிவாரணம் வழங்கி ஆறுதல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 10
அதிராம்பட்டினத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து நாசம். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (70). இவர் தனது மனைவி முனியம்மாள் (65)  இளைய மகன் சுரேஷ் குமார் (38) மற்றும் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று (ஆக.10) வெள்ளிக்கிழமை பகல் குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தீ பரவாமல் தடுத்தனர்.

தீ விபத்து குறித்து அறிந்ததும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  எம்எல்ஏ சி.வி சேகர், பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார். அப்போது, பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் பி.சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் சுப.ராஜேந்திரன், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை, துணைச் செயலாளர் எம்.ஏ முகமது தமீம், முன்னாள் கவுன்சிலர்கள் சிவக்குமார், உதயகுமார், அபுதாகிர், முருகானந்தம், சண்முகம், தேவதாஸ், முத்துகருப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சம்பவ இடத்தை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சாந்தகுமார், வருவாய்த் துறையினர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண உதவி ரூ. 5 ஆயிரம், 10 கிலோ அரிசி, வேட்டி- சேலைகள் ஆகியவற்றை வழங்கினர். தீ விபத்து குறித்து, அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் தியாகராஜன் விசாரித்து வருகிறார்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.